Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், முத்துவுக்கு அருண் பிடிக்காததால் மீனாவின் அம்மா இந்த சம்பந்தம் சீதாவுக்கு வேண்டாம் என்று முடிவு எடுத்து விட்டார். இதனால் வீட்டில் சொன்னபடியே கேட்கலாம் என்று முடிவு பண்ணிய சீதா, அருண் வீட்டுக்கு சென்று அருனிடம் என்னை மறந்து விடுங்கள். எங்க மாமாவை மீறி எங்க வீட்டில் எதுவும் நடக்காது என்று சொல்லிவிட்டு வந்து விடுகிறார்.
அடுத்ததாக முத்து, சீதாவிற்கு பார்த்திருந்த மாப்பிள்ளை பற்றி விசாரிப்பதற்கு ஆபீஸ்க்கு போகிறார். அப்படி அந்த மாப்பிள்ளை பற்றி அங்கு இருப்பவர்களிடம் விசாரித்த பொழுது அந்த மாப்பிள்ளைக்கு தம்மடிக்கவும், குடிப்பழக்கமும், பொய் சொல்லும் பழக்கம், அதிகமாக கோபப்பட்டு டென்ஷன் பார்ட்டி என எல்லோரும் சொல்லியதால் முத்து இந்த மாப்பிள்ளை சீதாவுக்கு வேண்டாம் என்று முடிவு பண்ணி விட்டார்.
இதனை தொடர்ந்து முத்து வீட்டுக்கு வந்த நிலையில் அங்கே ரோகிணியின் மலேசியா மாமா என்று பொய் சொன்ன டுபாக்கூர் மாமா வீட்டிற்கு வருகிறார். வந்ததும் அவரைப் பார்த்து விஜயா கோபப்பட்டு பேசுகிறார். ஆனாலும் அண்ணாமலை அவரை வீட்டிற்கு கூப்பிட்டு உட்கார வைத்து பேசுகிறார். பிறகு இதுதான் சான்ஸ் என்று அங்கிருந்த ரோகினியை வாய்க்கு வந்தபடி திட்டி பார்ப்பவர்களின் மனம் குளிர விஜய்யா ரோகினி அவமானப்படுத்தி விட்டார்.
ரோகினி டுபாக்கூர் மாமா, நான் இங்கு வந்து நடித்ததால் பரசுராமன் எங்க தங்கச்சி வீட்டில் வந்து சொல்லிவிட்டார். இதனால் அவர்கள் என்னிடம் சரியாக பேசாமல் ஒதுக்குகிறார்கள். நீங்கள் தான் எப்படியாவது பரசுராமனிடம் சொல்லி இந்த பிரச்சினையை முடித்து வைக்க வேண்டும் என்று கசாப்பு கடை மணி, அண்ணாமலை இடம் உதவி கேட்கிறார்.
அடுத்ததாக அருணை பார்த்து பேசிட்டு வீட்டுக்கு வந்த சீதா, அம்மாவிடம் நான் அருண் வீட்டுக்கு போயிட்டு என்னை மறந்து விடுங்கள் என்று சொல்லிவிட்டேன். அதனால் இனிமேல் என்னால் யாருக்கும் எந்த பிரச்சனையும் வராது என்று சொல்லிவிடுகிறார். இதையெல்லாம் பார்த்த மீனாவின் தம்பி சத்தியா, அக்காவின் காதலுக்கு நாம் ஏதாவது உதவி பண்ண வேண்டும்.
அதற்கு முத்து மாமா மற்றும் மீனா அக்காவிடம் பேசி பார்த்தால் தான் சரியாக இருக்கும் என்று முடிவு பண்ணி முத்து மற்றும் மீனாவுக்கு போன் பண்ணி பேசுவதற்கு கூப்பிடுகிறார். அந்த வகையில் சத்யா மற்றும் மீனா இருவரும் சேர்ந்து பேசி முத்துவின் மனசை மாற்றி அருண் மற்றும் சீதாவின் கல்யாணத்திற்கு சம்மதத்தை வாங்கி விடுவார்கள்.