Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், குமரவேலு செய்த அயோக்கியத்தனத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அரசி தனக்குத்தானே தாலி கட்டிக் கொண்டு சக்திவேல் வீட்டில் மருமகளாக இருக்கிறார். ஆனாலும் அவ்வப்போது பிரச்சனை பண்ண நினைக்கும் குமரவேலுக்கு அரசி அதிரடியாக ஆப்பு வைத்து வருகிறார்.
ஆனால் இப்படியே போனால் அரசி ராஜ்ஜியம் கை ஓங்கிவிடும் என்று நினைத்த குமரவேலு, அரசியை அடித்து துன்புறுத்ததற்கு தயாராகி விட்டார். இங்கு அரசி சித்ரவதை அனுபவித்தால் பாண்டியன் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு வலிக்கும் என்பதால் குமரவேலு, அரசியை அடிக்க கை ஓங்குகிறார். ஆனால் அரசி குமரவேலுக்கு வலிக்கும் விதமாக சம்பவத்தை ஏற்படுத்தி இருக்கிறார்.
இதனால் குமரவேலு கையில் காயம்பட்டதால் கத்த ஆரம்பித்து விட்டார். உடனே அப்பத்தாவும் குமரவேலுவின் அம்மாவும் வந்து என்ன ஆச்சு என்று கேட்கிறார்கள். எதுவும் சொல்ல முடியாமல் குமரவேலு வலியுடன் வெளியே போய் விடுகிறார். அடுத்ததாக பழனிவேலு வந்து மீனா உன்னை பார்த்து பேச வேண்டும் என்று சொல்லி கோவிலுக்கு கூட்டிட்டு போகிறார்.
அங்கே ராஜி மீனா இருப்பதை பார்த்து அரசி பேசுவதற்கு தயாராகி விட்டார். அப்பொழுது மீனா பொறுமையாக ஒவ்வொரு விஷயத்தையும் அரசிடம் கேட்கும் பொழுது அரசி, குமரவேலு போட்டோ வைத்து பிளாக் மெயில் பண்ணியது மன்னிப்பு கேட்க சுகன்யா என்னை அனுப்பி வைத்தது போன்ற எல்லா விஷயத்தையும் சொல்லிவிடுகிறார்.
அத்துடன் எனக்கு குமரவேலு தாலி கட்டவில்லை, நம்ம குடும்பத்தை பழிவாங்க வேண்டும் என்பதற்காக சில சூழ்ச்சிகளை செய்தான். அதனால் தான், எனக்கு வேறு வழி இல்லாமல் நானே தாலி கட்டி விட்டேன் என்று சொல்கிறார். இதையெல்லாம் கேட்ட மீனா அந்த சுகன்யாவை பற்றி தெரிந்தும் ஏன் எதற்காக அவளிடம் சொன்னாய். எங்களிடம் சொல்லி இருந்தால் இந்த அளவுக்கு பிரச்சனை வந்திருக்காது.
யார் மன்னிச்சாலும் இந்த சுகன்யாவை நாம் மன்னிக்க மாட்டேன், நிச்சயமாக சுகன்யாவின் முகத்திரையை எல்லோருக்கும் தெரியும் படி காட்டுவேன் என்று மீனா ஆவேசமாக பேசுகிறார். அது மட்டுமில்லாமல் நீ இனி குமரவேலு வீட்டில் இருக்கத் தேவையில்லை, வா எங்களுடன் என்று அரசியை ராஜி மற்றும் மீனா கூப்பிடுகிறார்கள். ஆனால் அரசி இப்போதைக்கு போக மாட்டாள், குமரவேலுவை பழிவாங்க வேண்டும் என்பதற்காக நிச்சயம் அதே வீட்டில் தான் இருப்பார்.
ஆனால் அரசிக்கு குமரவேலு தாலி கட்டவில்லை என்ற உண்மை மீனா ராஜிக்கு தெரிந்து விட்டது. அதனால் நிச்சயம் இதிலிருந்து அரசியை காப்பாற்றுவதற்கு இவர்கள் ஏதாவது முயற்சி எடுப்பார்கள். சுகன்யாவின் இரட்டை முகமும் வெளிச்சத்திற்கு வரப்போகிறது.