Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், காவிரியையும் நவீனையும் தவறாக புரிந்து கொண்டு வாய்க்கு வந்தபடி பேசிய யமுனாவை நவீன் கோபத்தில் அடித்து விடுகிறார். ஆனால் இந்த சண்டை சாரதா வீட்டில் வைத்து நடந்ததால் அங்கு இருப்பவர்களுக்கு நவீன் அடித்த விஷயம் தெரிந்து விட்டது. பிறகு எல்லோரும் சேர்ந்து யமுனாவை ஆறுதல் படுத்திய நிலையில் குமரனை கூட்டிட்டு யமுனா, நவீன் வீட்டிற்கு போய்விடுகிறார்.
அங்கே போனதும் நவீன், நான் செஞ்சது தவறுதான் என்று குமரனிடம் சொல்கிறார். அதற்கு குமரன் கொஞ்சம் கவனமாக இரு, யமுனாவை புரிந்துகொள்ள முயற்சி செய் என்று சொல்லிவிடுகிறார். பிறகு அங்கிருந்து கிளம்பும் பொழுது காவிரிக்கு போன் பண்ணி எங்கே இருக்கிறாய் என்று குமரன் கேட்கிறார். அதற்கு காவிரி நான் பொருட்காட்சியில் இருக்கிறேன். எனக்கு வேலை முடிய காலை வரை ஆகும்.
அதனால் யாரும் என்னை தேட வேண்டாம் நானே வேலை முடிந்ததும் காலையில் வீட்டிற்கு வந்து விடுகிறேன் என்று அசால்டாக பதில் சொல்கிறார். ஆனால் குமரனுக்கு தெரிந்து விட்டது காவேரி, விஜய்யுடன் தான் இருக்கிறார் என்று. இருந்தாலும் இந்த விஷயம் எதுவும் சாரதா வீட்டில் இருப்பவர்களுக்கு தெரியாததால் ரொம்பவே டென்ஷனாக இருக்கிறார்கள்.
இந்த காவிரிக்கு விஜய் தான் முக்கியம் என்று நன்றாகவே தெரியும். அப்படி இருக்கும் பொழுது சாரதாவிடம் சொல்லிவிட்டு என்னால் விஜய் இல்லாமல் இருக்க முடியாது. விஜய்க்கும் நான்தான் தேவை என்று சொல்லிவிட்டு விஜய் உடன் சேர்ந்து வாழ்ந்தால் சாரதாவிற்கும் இந்த டென்ஷன் இருந்திருக்கிறது. ஆரம்பத்தில் சில கோபங்கள் இருந்தாலும் அப்புறம் எல்லாம் சரியாகிவிடும்.
முக்கியமாக காவிரி கர்ப்பமாக இருக்கிறார் என்று விஷயம் எல்லாருக்கும் தெரிந்து விட்டால் அவர்களை விஜயுடன் வாழ்வதற்கு எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்க மாட்டார்கள். ஆனால் எல்லாத்தையும் புத்திசாலித்தனமாக செய்கிறேன் என்ற பெயரில் சில விஷயங்களில் காவேரி சுயநலமாக தான் இருக்கிறார். இதற்கு ஏற்ற மாதிரி விஜய்யும் காவிரி என்ன சொன்னாலும் சரியாகத்தான் இருக்கும் என்று ஆமா சாமி போட்டு வருகிறார்.
அடுத்ததாக என்னுடைய வாழ்க்கை இந்த அளவுக்கு கேள்விக்குறியாக இருப்பதற்கு நீங்க தான் காரணம் என்று வெண்ணிலா, பசுபதி வீட்டில் போய் சண்டை போடுகிறார். ஆனால் பசுபதி மற்றும் ராகினி, எங்களுடைய பேச்சைக் கேட்காமல் காவிரி கூப்பிட்டதும் போயி எல்லாத்தையும் சொன்னதனால் தான் காவிரி விஜய் ஒன்று சேர்ந்து விட்டார்கள்.
எல்லாதவறும் உன் மீது தான் இருக்கிறது என்னிடம் வந்து பேசுவதற்கு எந்த லாய்க்கும் இல்லை என்று வெண்ணிலாவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சரியான ஆப்பு வைத்து விட்டார். தற்போது விஜய் சப்போர்ட் இல்லாமலும், பசுபதி ராகினி சப்போர்ட் இல்லாமலும் வெண்ணிலா தவித்து வருகிறார்.