விஜயாவின் மனசை உருக வைத்து பாசமாக பேசிய முத்து.. ரோகினியை சந்தேகப்படும் மனோஜ்

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், அருண் அம்மா சீதாவின் வீட்டிற்கு வந்து அருண் கல்யாண விஷயத்தை பற்றி பேசுகிறார். ஆனால் மீனா, முத்துவுக்கு இதில் சம்மதம் இல்லை என்பதால் என்ன சொல்வது என்று தெரியவில்லை. இருந்தாலும் சீதாவின் காதலுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதற்காக அருண் அம்மாவிடம் இந்த கல்யாணம் நிச்சயம் நடக்கும்.

நான் என் வீட்டுக்காரரின் மனசை மாற்றி சீதா அருண் கல்யாணத்தை நடத்தி வைக்கிறேன் என்று வாக்கு கொடுத்து விடுகிறார். அடுத்ததாக மனோஜ், ரோகினி யாரிடம் பேசுகிறார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக மகேஷ் என்ற நம்பரை போனிலிருந்து எடுத்து விடுகிறார். அப்பொழுது கடைக்கு வந்த மனோஜின் நண்பரை பேச சொல்கிறார். அவர் பேசும் பொழுது மகேஷ் என்று சொன்னதும் மனோஜ்க்கு பயம் வந்துவிட்டது.

ஆனால் இதெல்லாம் ரோகினி ஏற்பாடு தான், ரோகிணியின் தோழி ஒருத்தி மகேஸ்வரி என்பதால் அவரிடம் எல்லா விஷயத்தையும் சொல்லி இந்த மாதிரி நடிக்க சொல்லி இருக்கிறார். ரோகினி நடிக்கிறார் என்பதை தெரிந்து கொள்ளாத மனோஜும், ரோகினி மீது சந்தேகப்பட்டு பயப்பட ஆரம்பித்து விடுகிறார். ரோகிணியும் அதற்கேற்ற மாதிரி நடந்து கொள்வதால் மனோஜ்க்கு பயம் வந்து விட்டது.

உடனே ரோகிணி இந்த பயத்தை வைத்து நான் மறுபடியும் மனோஜை என்னிடம் பேச வைத்து என் கண்ட்ரோலுக்கு கொண்டு வந்து விடுவேன் என்று தைரியத்துடன் இருக்கிறார். அடுத்ததாக வீட்டிற்கு வந்த மீனா, சீதா அருண் கல்யாண விஷயமாக முத்துவிடம் பிடிவாதமாக பேசுகிறார். ஆனால் முத்து ஓவர் தெனாவட்டில் என்னை மீறி இந்த கல்யாணம் நடந்தால் உன் குடும்பத்திற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று ஒதுங்கி விடுவேன்.

அதோடு உனக்கும் எனக்கும் இருக்கும் புரிதலும் முடிந்து விடும் என்று பிளாக்மெயில் பண்ணும் அளவிற்கு மீனாவை மிரட்டுகிறார். ஆனால் மீனா என்ன ஆனாலும் என்னுடைய தங்கை ஆசைப்பட்ட மாதிரி கல்யாணம் நடக்க வேண்டும் என்ற விஷயத்தில் பிடிவாதமாக முத்துவிடம் பேசுகிறார். எதற்கும் அசராத முத்து கடைசியில் குடித்துவிட்டு வீட்டிற்கு வருகிறார்.

வந்ததும் விஜயா, முத்துவை பார்த்து வழக்கம்போல் ஆரம்பித்து விட்டாயா என்று கேட்கிறார். அதற்கு முத்து, விஜயாவின் கையைப் பிடித்து சென்டிமென்ட் ஆக பேசி பாசத்தை காட்டும் அளவிற்கு மனசை உருக்கி அம்மா மீது வைத்த பாசத்தை காட்டுகிறார். இதையெல்லாம் பார்த்து விஜயா மனசும் கலங்கிவிட்டது. ஆனால் முத்துக்கு என்னமோ நான் மட்டும்தான் சரி, நான் என்ன செய்தாலும் கரெக்டாக இருக்கும் என்ற ஒரு தலைக்கனத்தில் ஆடுகிறார்.