10 வருடங்களாக முடங்கிய விஜய், அஜித் பட தயாரிப்பு நிறுவனம்.. மீட்டெடுக்கும் விஜய் டிவி நாயகன்

Vijay : விஜய், அஜித், சிம்பு, தனுஷ், ஜெயம் ரவி என்று மிகப் பெரிய நடிகர்களின் படங்களை தயாரிப்பு நிறுவனம் தயாரித்தது. ஆனால் கடந்த பத்து வருடங்களாக படத்தை தயாரிக்க முடியாமல் முடங்கி கிடந்தது. இப்போது மீண்டும் படத்தை தயாரிக்க முன்வந்துள்ளது.

சரத்குமார் நடிப்பில் 1994 ஆம் ஆண்டு வெளியான அரண்மனை காவலன் படத்தில் மூலம் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியது தான் லட்சுமி மூவி மேக்கர்ஸ். இந்த நிறுவனம் விஜய்யின் பிரியமுடன், அஜித்தின் உன்னை தேடி, சூர்யாவின் உன்னை நினைத்து, கமலின் அன்பே சிவம், தனுஷின் புதுப்பேட்டை ஆகிய படங்களை தயாரித்தது.

கடைசியாக ஜெயம் ரவி நடிப்பில் வெளியான சகலகலா வல்லவன் படத்தை தயாரித்திருந்தது. 2015 க்கு பிறகு படங்களை தயாரிப்பதை நிறுத்திவிட்டது. இந்நிறுவனத்தை தயாரித்த தயாரிப்பாளர் முரளிதரனின் மகன் ஸ்ரீவத்ஸன், கோகுல கிருஷ்ணன் ஆகியோர் சார்பில் இப்போது படத்தை தொடங்க இருக்கிறார்கள்.

10 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் படங்களை தயாரிக்க தொடங்கிய பிரபல நிறுவனம்

இது இந்த தயாரிப்பு நிறுவனத்தின் 27ஆவது படமாகும். இப்படத்தை சஜோ சுந்தர் இயக்க இருக்கிறார். இதில் கதாநாயகனாக விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக வலம் வந்த புகழ் நடிக்க இருக்கிறார்.

மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு வருகின்ற ஜூன் 6 ஆம் தேதி தொடங்க உள்ளது. பல தயாரிப்பு நிறுவனங்கள் இருந்த இடமே தெரியாத அளவுக்கு போய்விட்டது. அதை அவர்களது வாரிசுகள் மீட்டெடுக்கவும் முயற்சி செய்வதில்லை.

ஆனால் இப்போது லட்சுமி மூவி மேக்கர்ஸ் பத்து வருடங்களுக்குப் பிறகு மீண்டும் படத்தை தயாரிக்க இருக்கிறது. இந்தச் செய்தி திரைத்துறை மற்றும் சினிமா ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.