சன் டிவி விஜய் டிவி சீரியலில் ஹிட் கொடுத்த சீரியல் நடிகர்.. கடன் தொல்லையால் அவஸ்தைப்படும் மனைவி

Serial Actor: என்னதான் பிரபலமாக இருந்தாலும் தன்னுடைய காலத்திற்குப் பிறகு தன் குடும்பத்தையும் மனைவியும் பார்த்துக் கொள்வதற்கு ஒரு நிலையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் என்ன நிலைமையில் அவஸ்தப்படுவார்கள் என்பதற்கு உதாரணமாக மறைந்து போன சீரியல் நடிகரின் மனைவி தற்போது கடன் தொல்லையால் தத்தளித்துக் கொண்டு வருகிறார்.

அதாவது தமிழ் திரைப்பட இயக்குனர், மற்றும் சின்னத்திரை நடிகருமான ராஜசேகர் என்பவர் கடந்த 2019 ஆம் ஆண்டு உடல்நிலை குறைவால் மறைந்து போனார். இவர் தமிழில் பாலைவனச் சோலை, சின்ன பூவே மெல்ல பேசு, மனசுக்குள் மத்தாப்பு போன்ற 10 படங்களை இயக்கியிருக்கிறார். இவர் திரைப்பட எழுத்தாளரும் கூட. அப்படிப்பட்டவர் நிழல்கள், தமிழன் மற்றும் நரசிம்மா போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார்.

அதன் பின் சின்னத்திரையில் நுழைந்த இவர் விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி என்ற சீரியல் மூலம் மிகவும் பிரபலமானார் . இதனை அடுத்து சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் என்ற சீரியலிலும் ராஜசேகர் நடிப்பால் அனைவரையும் கவர்ந்தர். அப்படிப்பட்டவர் இறப்பிற்குப் பின் வீட்டுக் கடனை அடைக்க முடியாமல் மனைவி தாரா என்பவர் தவித்து இருக்கிறார்.

உதவிக்கும் யாரு இல்லாமல் இருப்பதால் வருமானத்திற்கு வழி இல்லாமல் வீட்டுக் கடனை அடைக்க முடியாமல் போய்விட்டது. இதனால் நேற்று ராஜசேகர் மற்றும் மனைவி தாரா வாழ்ந்த வீடு ஜப்தியில் போய்விட்டது. இருந்த ஒரே வீடும் ஜப்தியில் பறிகொடுத்த ராஜசேகரன் மனைவி தாரா, தங்குவதற்கு வீடும் இல்லாமல் போவதற்கு இடமும் இல்லாமல் கண்ணீர் மல்க உதவி கேட்டு வருகிறார்.

என்னதான் பிரபலமாகி நாம் சம்பாதித்தாலும் நம் காலத்திற்குப் பிறகு குடும்பத்தை ஒரு பாதுகாப்பாக வைக்க வேண்டும். இல்லை என்றால் இவருடைய நிலைமை தான் என்பதற்கு உதாரணமாக ராஜசேகரின் மனைவி தாரா நிலைமை ரொம்பவே பரிதாபமாக இருக்கிறது.

மேலும் ராஜசேகரனின் முதல் மனைவி வெள்ளித்திரை நடிகை சரண்யா. இவர்களுக்குள் ஏற்பட்ட மனக்கசப்பால் கல்யாணம் ஆகி 3 வருடங்களிலேயே பிரிந்து விட்டார்கள். அதன்பின் தான் தாரா என்பவரை ராஜசேகர் திருமணம் செய்தார்.