Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், வெண்ணிலா பிரச்சினையில் கோர்ட்டு கேஸ் என்று அலைந்து திரிந்த விஜய் ஒரு வழியாக எல்லா பிரச்சினையும் முடிந்துவிட்டது என்று வீட்டிற்கு வந்து ரிலாக்ஸ் ஆக இருக்கிறார். அப்பொழுது சித்தியிடம் அஜய் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். அஜய் உடைய சந்தோசமான வாழ்க்கைக்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என்று சொல்கிறார்.
அந்த நேரத்தில் விஜயின் ஆபீஸ்ல இருந்து போன் பண்ணி வெண்ணிலா தற்கொலை முயற்சி பண்ணி விட்டதாக செய்தி வருகிறது என்று சொல்கிறார். இதை கேட்டதும் அதிர்ச்சியான விஜய், போனில் வெண்ணிலா பற்றி நியூஸை பார்க்கிறார். அப்பொழுது தாத்தா லாயருக்கு போன் பண்ணி நடந்த விஷயத்தை சொல்லி விஜய்க்கு முன் ஜாமின் கேட்கிறார்.
ஏனென்றால் வெண்ணிலாவின் தற்கொலைக்கு விஜய் தான் காரணம் என்று செய்திகள் வந்த நிலையில் விஜயை அரெஸ்ட் பண்ணுவதற்கு போலீஸ் வருவார்கள் என்று தாத்தாவுக்கு தெரியும். அதனால் லாயர் மூலம் முன்ஜாமின் எடுக்கலாம் என்று முயற்சி எடுத்தார். ஆனால் லாயர் அதெல்லாம் வேண்டாம் விஜய் யாருக்கும் தெரியாமல் தலைமறைவாக இருந்தால் போதும் என்று சொல்லிவிடுகிறார்.
அதன்படி விஜய் வீட்டிலிருந்து கிளம்பி விடுகிறார். பிறகு காவேரி, கங்காவிடம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது கங்கா நேற்று முழுவதும் விஜயுடன் தான் இருந்தாய் என்று கேட்கிறார். அப்பொழுது காவேரி ஆமாம் என்று சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது சாரதா வந்து விஜயை விவாகரத்து பண்ண சொல்கிறார். அந்த நேரத்தில் பதட்டத்துடன் குமரன் வந்து வெண்ணிலா தற்கொலை செய்த விஷயத்தை சொல்கிறார்.
இதனால் சாரதா இந்த பழியையும் காவிரி மீது தான் விழும் என்று பயப்பட ஆரம்பித்து விடுகிறார். உடனே காவிரி வீட்டில் இருந்து கிளம்பி விஜயை பார்த்து பேச வேண்டும் என்று முயற்சி எடுக்கிறார். அப்பொழுது அங்கே வந்த விஜய், காவிரியை காரில் கூட்டிட்டு நான் என்னுடைய கெஸ்ட் ஹவுஸ்க்கு போய் இருக்கிறேன். என்னிடம் பேச வேண்டுமென்றால் இந்த போனில் மட்டும் கால் பண்ணு என்று சொல்லி புதுசாக ஒரு போனை கொடுத்துவிட்டு கெஸ்ட் ஹவுஸ்க்கு போய் விடுகிறார்.
காவிரி ஆஸ்பத்திரியில் இருக்கும் வெண்ணிலாவே பார்ப்பதற்காக போகிறார். அங்கே வெண்ணிலாவின் மாமா அழுது கொண்டிருப்பதை பார்த்ததும் காவிரி அவரிடம் பேசுகிறார். அப்பொழுது காவிரிக்கு சந்தேகம் வந்த நிலையில் என்ன நடந்தது என்று சொல்லுங்க என கேட்கிறார். அப்பொழுது உண்மை சொல்ல வரும்பொழுது பசுபதி மிரட்டியதை யோசித்துப் பார்த்து தற்கொலை செய்துவிட்டால் என்று பொய் சொல்லி விடுகிறார்.
பிறகு அந்த இடத்திற்கு போலீஸ் வந்து காவிரியிடம் விஜய் பற்றி விசாரிக்கிறார். காவி,ரி விஜய் எங்கே இருக்கிறார் என்று தெரியாது என சொல்கிறார். உடனே காவேரி போனை வாங்கி செக் பண்ணி பார்க்கிறார். பிறகு விஜய் காவேரி வீட்டில் இருப்பாரோ என்ற சந்தேகத்தில் போலீஸ் காவிரி வீட்டிற்கு போய் செக் பண்ணி பார்க்கிறார்கள். இதனால் சாரதா குடும்பத்தில் இருப்பவர்கள் பயப்பட ஆரம்பித்து விட்டார்கள்.
இதையெல்லாம் தாண்டி வெண்ணிலா, இறப்பதற்கு சான்ஸ் இல்லை. ஆனால் மாடியில் இருந்து கீழே விழுந்து தான் மண்டையில் அடிபட்டு பழைய ஞாபகங்கள் எல்லாம் அழிந்து போகப்போகிறது. விஜய்யை காதலித்தது கூட தெரியாத அளவிற்கு புதுசாக வெண்ணிலா வரப்போகிறார். அதன் பிறகு மாமாவுடன் வெண்ணிலாவை அனுப்பி வைத்து விஜய் அதற்கான பணத்தையும் கொடுத்து செட்டில் பண்ணி விடுவார். அடுத்து விஜய் காவேரி ஒன்று சேர்ந்து சந்தோசமாக வாழ போகிறார்கள்.