வீரா சீரியலில் கண்மணி மீது பழியை தூக்கி போட்ட விஜி.. மாறன் வீராவுக்கு தெரிந்த உண்மை

Veera Serial: ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வருகின்ற வீரா சீரியலில், விஜியின் ரகசியம் என்னவென்று தெரியாமல் மாறனும் வீராவும் குழப்பத்தில் இருக்கிறார்கள். அதனால் விஜய்யின் ஃபோனை ட்ராக் பண்ண ஆரம்பித்து விட்டார்கள். அந்த வகையில் மாறன் வீரா ஆரம்பித்த சாப்பாடு உணவகத்தில் கலப்படம் செய்து பிசினஸ் பண்ண முடியாத அளவிற்கு ஒரு பிரச்சனை ஏற்பட்டு விட்டது.

இதற்கு காரணம் விஜியின் சதியாக இருக்கலாம் என்று வீராவும் மாறனும் நினைக்கிறார்கள். உடனே வீரா, விஜி போனை ட்ராக் பண்ணிட்டு வருகிறோம். அதை செக் பண்ணி பார்த்தால் தெரிந்து விடும் என்று வீரா ஐடியா கொடுக்கிறார். அதன்படி செக் பண்ணி பார்க்கும் பொழுது விஜி தான் போனில் மாறன் வீரா சமைத்த உணவில் கலப்படம் செய்து பிரச்சனையே பண்ண சொன்னது விஜி தான் என்று தெரிந்து விட்டது.

பிறகு இதற்கு காரணமான அந்த நபரை கூப்பிட்டு விசாரித்துப் பார்த்தால் விஜி மாட்டிக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது. குடும்பத்தில் இருப்பவர்களும் விஜியை பற்றி தெரிந்து கொள்வார்கள் என்று அந்த நபரை பிடித்து வந்து மாறன் எல்லோரும் முன்னாடியும் அடித்து கேட்கிறார். அப்பொழுது அந்த நபர் சொல்கிறேன் என்று சொல்லி விஜி பெயரை சொல்லாமல் கண்மணி பெயரை சொல்லி மாட்டி விட்டார்.

ஆனால் இதற்கு காரணம் விஜி தான் என்று மாறன் வீராவுக்கு தெரிந்ததால் அந்த நபர் பொய் சொல்கிறார் என்று தெரிந்து வேறு வழி இல்லாமல் விட்டு விடுகிறார்கள். இருந்தாலும் என்ன பிசினஸ் பண்ணுவது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்த பொழுது ராமச்சந்திரன் துணி பிசினஸ் பண்ணுவதற்கு ஐடியா கொடுத்து விடுகிறார். அதன்படி மாறன் சைக்கிளில் துணி வியாபாரம் பண்ணுவதற்கு தயாராகி விட்டார்.

அத்துடன் தற்போது சோசியல் மீடியாவில் போட்டுவிட்டால் அதன் மூலம் நமக்கு பிசினஸ் லாபம் கிடைக்க வாய்ப்பிருக்கு என்று மாறன் வீராவிடம் சொல்கிறார். இதனை அடுத்து கண்மணியை வைத்து பகடகாயாக யூஸ் பண்ணி குடும்பத்தில் குழப்பத்தை விஜி ஏற்படுத்தி வருகிறார். இதையெல்லாம் மாறன் வீரா கண்டுபிடித்து விஜியை வீட்டை விட்டு அனுப்பினால் தான் கார்த்திக் பிருந்தா வாழ்க்கையும் சந்தோஷமாக அமையும்.