Ayyanar Thunai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற அய்யனார் துணை சீரியலில், நிலா அண்ணிக்கு போன் பண்ணி ஆதார் நம்பர் கொடுக்கச் சொல்லி உதவி கேட்கிறார். அதனால் அண்ணியும் ஆதார் நம்பரை தேடி பார்த்து நிலாவுக்கு அனுப்புவதற்கு தயாராகி விட்டார். ஆனால் இதை பார்த்த நிலாவின் அண்ணன், அந்த நம்பருக்கு பதிலாக வேறொரு நம்பரை எழுதி வைத்து விட்டார்.
இது தெரியாத நிலாவின் அண்ணி அந்த நம்பரை நிலாவின் போனுக்கு அனுப்பி வைத்து விட்டார். நிலா அந்த நம்பரை பார்த்ததும் ஆதார் நம்பர் வாங்குவதற்கு வழி பிறந்து விட்டது என்று சந்தோசத்தில் சோழனை கூட்டிட்டு கடைக்கு போகிறார். அங்கே அந்த நம்பர் சொன்ன பிறகு கடைக்காரர் ஓடிபி சொல்ல வேண்டும் என்று கேட்ட பொழுது நிலா, ஏற்கனவே பழைய சிம்மை தூக்கி எறிந்து விட்டார்.
இதனால் ஆதார் கார்டு வாங்க முடியாமல் போய்விடுகிறது. ஆனால் அதற்கு பதிலாக அந்த ஓடிபி நிலாவின் அண்ணி நம்பருக்கு வந்து விட்டது. அதை பார்த்ததும் நிலா அண்ணி நமக்கு ஏன் ஓடிபி வந்திருக்கிறது என்று குழப்பத்தில் இருக்கிறார். அந்த சமயத்தில் நிலா அண்ணன் நான்தான் அனுப்பி வைத்தேன். எங்க வீட்டிலேயே இருந்து கொண்டு நிலாவுக்கு உதவி செய்து இருக்கியா என்று திட்ட ஆரம்பித்து விடுகிறார்.
அடுத்ததாக இந்த பிளானும் சொதப்பிவிட்டது என்று நிலா பீல் பண்ணிக் கொண்டிருக்கிறார். இதனை அடுத்து சேரனுக்கு முதலில் பொண்ணு பார்த்த வீட்டிற்கு நிலா சோழன் போகிறார்கள். அங்கே போனதும் பெண் குடும்பத்தில் இருப்பவர்கள் சொன்னது என்னவென்றால் எங்களுக்கு உங்கள் அண்ணன் சேரன் பிடித்து விட்டது. என்னுடைய பொண்ணுக்கும் ரொம்பவே பிடித்திருக்கிறது.
ஆனால் என்னுடைய பொண்ணு ஒரு கண்டிஷன் போடுகிறார் என்று சொல்கிறார். உடனே நிலா அந்த பெண்ணிடம் என்ன கண்டிஷன் என்று கேட்ட பொழுது கல்யாணத்துக்கு பிறகு நாங்கள் தனி குடித்தனம் போய்விட வேண்டும் என்று சொல்கிறார். இதை கேட்டதும் நிலா மற்றும் சோழன் அதிர்ச்சியாகி விட்டார்கள். சேரன் இல்லை என்றால் குடும்பம் குடும்பமாக இருக்காது அதனால் நிச்சயம் நிலா மற்றும் சோழன் இந்த முடிவுக்கு மறுத்து விடுவார்கள்.