Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், தனக்கு காரியம் நடக்க வேண்டும் என்றால் குறுக்கு புத்தியில் போனால் கூட பரவாயில்லை என்று ரோகினி, மனோஜின் வீக்னெஸ் பாயிண்டை புரிந்து அதற்கு ஏற்ற மாதிரி காய் நகர்த்தி தன் வசம் மனோஜ் வரும்படி சாதித்து விட்டார். மனோஜும் நீ இல்லாமல் என்னால் இருக்க முடியாது.
அதே நேரத்தில் அம்மாவையும் சமாதானப்படுத்த வேண்டும். அதற்கு நீ என்ன சொன்னாலும் ஓகே என்று சொல்லிவிட்டார். அந்த வகையில் விஜயாவை மடக்குவதற்காக பார்வதி மூலம் ரோகிணி புதுசாக பிளான் போட்டு விட்டார். அடுத்ததாக ஸ்ருதி ஹோட்டல் ஆரம்பிக்கப் போவதில் பிடிவாதமாக இருப்பதால் அதற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்.
ரவியிடமும் நீனும் யோசித்து சொல்லு என்று கேட்கிறார். ஆனால் ரவிக்கு இதில் விருப்பமில்லை என்பதால் நீயே முடிவு பண்ணிக்கோ என்று சொல்லிய நிலையில் சுருதி, ஹாப்பியா வாங்க ஹேப்பியா சாப்பிட்டு போங்க என்பதற்கு ஏற்ற மாதிரி ஹேப்பினு வைக்கலாம் என சொல்கிறார். இதனை அடுத்து முத்து, வழக்கம்போல் குடித்துவிட்டு வந்து அருண் நம்பிக்கை துரோகம் செய்துவிட்டான் என்று கோபமாக பேசுகிறார்.
நகை திருட்டு கும்பலில் இருந்து அந்த அம்மாவை காப்பாற்றியது நான் தான். ஆனால் அந்த அருண் நல்லவன் போல் பெயர் வாங்கி புரமோஷன் வாங்கிக் கொண்டதாக மீனாவிடம் புலம்புகிறார். மீனாவுக்கு சந்தேகம் வந்த நிலையில் சீதாவுக்கு போன் பண்ணி சொல்லுகிறார். சீதாவும் இதில் எது உண்மை என்று தெரியவில்லை என சொல்லிய பொழுது மீனா காலையில் மாமாவுக்கு போதை தெளிந்ததும் நான் விசாரிக்கிறேன் என்று சொல்லி விடுகிறார்.
அடுத்ததாக திருட்டு கும்பலில் மாட்டிக் கொண்ட அந்த அம்மாவும் அவருடைய கணவரும் முத்துவின் வீட்டிற்கு வந்து விஜயாவிடம் முத்துவை பெற்று எடுத்ததற்காக பாராட்டி பேசி பரிசையும் கொடுத்து தங்கச் செயினையும் வழங்குகிறார். அத்துடன் முத்துவை பாராட்டி பேசி காப்பாற்றியதை பெருமையாக சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது சுருதி அதை வீடியோ எடுத்து இணையதளத்தில் வெளியிட்டு விடுகிறார்.
இந்த வீடியோ வைரலாகி போன நிலையில் போலீசும் இந்த வீடியோவை பார்த்து அருணுக்கு போன் பண்ணி வீடியோ பார்த்தியா? அந்த அம்மாவை காப்பாற்றியது நீதான் என்று பெருமையா சொன்ன, ஆனால் யாரோ முத்து என்றவன் தான் காப்பாற்றியதாக அந்த அம்மாவே சொல்றாங்க என கோவமாக திட்டி விட்டு போனை வைக்கிறார். இதனால் அருண், அந்த அம்மாவை காப்பாற்றவில்லை என்று அனைவருக்கும் தெரிந்த நிலையில் பிரமோஷன் கேன்சல் ஆகிவிடும்.
ஸ்ருதி அந்த வீடியோவை வெளியிடாமல் இருந்தால் அருணுக்கு ப்ரோமோஷன் கிடைத்திருக்கும். இதனால் அருண் தனக்கு வந்த வாய்ப்பு கைநழுவி போய்விட்டதே என்று கோபத்தில் இருக்கிறார். இந்த விஷயம் அருண் அம்மாவுக்கு தெரிந்தாலும் ஒரேடியாக சீதா வேண்டாம் என்று முடிவு எடுக்கப் போகிறார்.