ரஜினி இவ்வளவு உயரம் அடைவதற்கு காரணம் அவருடைய மனிதம் தான். ஆனால் அந்த மனிதாபிமானத்தையும் பல பேர் இங்கே சீண்டிப் பார்த்த காலங்களும் உண்டு. 74 வயதாகியும் இன்று 25 வயது பாலகன் போல் சுற்றி வருகிறார். ஆரம்ப காலகட்டத்தில் ரஜினிக்கு வந்த பிரச்சனைகள்,
காவிரி நீர் பிரச்சினையில் திரைப்பட சங்கம் தலைமையில் நடிகர்கள் உண்ணாவிரதம் இருந்தார்கள். அப்பொழுது ரஜினி கர்நாடகாவிற்கு எதிராக குரல் கொடுக்க, அவரின் படத்தை அங்கே ரிலீஸ் செய்வதற்கு பிரச்சனையை கிளப்பி போராட்டம் நடத்தினார்கள். பின்னர் மன்னிப்பு கேட்டவுடன் பிரச்சனை தீர்ந்தது.
கர்நாடகாவில் தான் இப்படி என்றால் இங்கே பாமாக கட்சி நிறுவனர்களாகிய ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இருவரும் பாபா படத்திற்கு எதிராக குரல் கொடுத்து படத்தை ஓட விடாமல் தடுத்தனர். ரஜினி படத்தில் சிகரெட் குடிப்பது போன்ற காட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சியின் தொண்டர்கள் படப்பெட்டியை தூக்கிச் சென்றார்கள். இப்படி சின்ன டாக்டர், பெரிய டாக்டர் இருவரும் பாபா பட நேரத்தில் ரஜினிக்கு எதிராக நின்றார்கள்.
ஆனால் ரஜினி உண்மையில் மனிதாபிமானமிக்க மனிதர். அதற்கு எடுத்துக்காட்டாக பல விஷயங்களை கூறலாம். சூட்டிங் செல்லும்போது டிராபிக்கில் மாட்டிக்கொண்ட ரஜினி தலையில் முக்காடு அணிந்து கொண்டு அருகில் நின்றவர் பைக்கில் லிப்ட் கேட்டு சென்றுள்ளார். தான் போகாவிட்டால், எல்லோரும் பாதிக்கப்படுவார்கள் என்ற மனிதம் தான் அதற்குக் காரணம்.
2.0 படபிடிப்பின் போது மகாபலிபுரத்தில் சூட் ரூமில் தங்கிக் கொண்டிருந்த ரஜினிக்கு உதவியாளராக இருக்கும் பையனை அழைத்து அந்தரூமில் உள்ள பெட்டில் குதிக்க சொல்லி ஆனந்தப்பட்டிருக்கிறார். படபிடிப்பில் ரஜினி ஆடை கிழிந்ததால் டூப் போட்டவரிடம் இருந்து ஆடையை வாங்கி வேர்வையோடு கூட அணிந்துள்ளாராம் ரஜினி.
அப்பேர்பட்ட மனிதம் கொண்ட ரஜினியின் பயோகிராபி படம் சீக்கிரம் வெளிவர வேண்டும் என எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அப்பொழுது ரஜினிக்கு துன்பம் கொடுத்தவர்கள் எல்லோரையும் இன்று கர்மா விட்டு வைக்கவில்லை.