Vijay Tv: விஜய் டிவியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் மகாநதி சீரியலில், பல பிரச்சனைகளை தாண்டி விஜயும் காவிரியும் ஒன்று சேர்வார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில். ரசிகர்களை உற்சாகப்படுத்துவதற்காக இயக்குனர் அவர்கள் கதையை அற்புதமாக நகர்த்திக் கொண்டு செல்கிறார். மகாநதி சீரியலில் இன்றைய எபிசோடில் காவிரிக்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டுள்ளது .
காவிரிக்கு காய்ச்சல் அதிகமாக இருப்பதால் காவிரியின் அம்மா, பாட்டி மற்றும் அக்கா ஆகியோர் காவிரியின் அறையில் காவேரியை விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள். கங்கா காவிரியிடம் என்ன ஆச்சு என்று தொட போகிறாள். உடனே காவிரியின் பாட்டி கங்காவிடம் அவளுக்கு காய்ச்சல் அதிகமாக இருக்கிறது. கர்ப்பிணி பெண் நீ அவளைத் தொட்டு உனக்கு காய்ச்சல் வந்து விட்டால் என்ன செய்வது அவளை தொடாதே என்று கூறுகிறார்.
உடனே காவிரி நான் தனியாக என்னை பார்த்துக் கொள்கிறேன் என்று கூறிவிட்டு அந்த அறையை விட்டு நகர்ந்து வேறொரு தனி அறைக்கு செல்கிறாள். அங்கு சென்று விஜயுடன் போனில் பேசுகிறார். விஜய் உனக்கு என்ன ஆயிற்று என்று காவிரியிடம் கேட்கிறார். அதற்கு காவேரி என்னன்னு தெரியலைங்க பெரியம்மை போல் உள்ளது என்று விஜயிடம் கூறுகிறார் .உடனே விஜய் காவிரியிடம் எதுவும் சொல்லாமல் திடீரென்று காவிரியின் வீட்டிற்கு வருகிறான். அந்த சமயம் காவேரி தான் வீட்டு கதவை திறக்கிறாள்.
விஜயை காப்பாற்றுவாரா காவேரி ..
யாருக்கும் தெரியாமல் காவேரி விஜயை அழைத்து செல்கிறார். காவிரி விஜய்யிடம் நீங்கள் எதற்கு இங்கே வந்தீர்கள் என்று கேட்கிறாள் அதற்கு விஜய் உனக்கு உடல்நிலை சரியாகும் வரை நான் உன்னுடன் தான் உன்னை கவனித்துக் கொண்டு இங்கே இருக்க போகிறேன் என்று கூறுகிறான். உடனே காவிரி அதெல்லாம் எப்படிங்க முடியும் நீங்க முதல்ல கிளம்புங்க நான் பாத்துக்குறேன் என்று கூறுகிறார், ஆனால் விஜய் கேட்கவில்லை அன்று இரவு அங்கேயே தங்குகிறான்.
மறுநாள் காவிரியின் அம்மா, காவிரியின் கதவை தட்டுகிறாள். விஜய் தூக்க கலக்கத்தில் மறந்து போய் கதவை திறக்கிறான். காவிரியின் அம்மாவை காவிரியின் தங்கை அழைத்ததால் பின்னால் திரும்பி பேசிக் கொண்டிருக்கிறார். அதை பார்த்து விஜய் பதற்றப்பட்டு காவிரியை எழுப்பி விட்டு, கதவின் பின்னாடி ஒளிந்து கொள்கிறான். காவேரி எழுந்து புரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறாள். உடனே காவிரி அம்மா நீ எதற்கு இப்படி முழித்துக் கொண்டிருக்கிறாய் என்று கேட்கிறாள் .
காவிரிக்கு உடல்நிலை சரியாகும் வரை விஜய் காவிரியின் வீட்டில் தான் தங்கப் போகிறார். அதுவும் காவிரியின் வீட்டில் உள்ள யாருக்கும் தெரியாமல், காவிரியும் விஜய்யும் மாட்டிக் கொள்வார்களா அல்லது காவேரி யாருக்கும் தெரியாமல் விஜய் தன்னுடைய அறையிலேயே காப்பாற்றி வைத்துக் கொள்வாளா என்பது தான் இந்த வார கதை.
விஜய்க்கும் காவிரிக்கும் நடுவில் குட்டி குட்டி சண்டை, நிறைய ரொமான்ஸ் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.