வாடிவாசலில் இருந்து தலை தெறிக்க ஓடிய சூர்யா.. தனி ரூட்டை மாற்றிய வெற்றிமாறன்

சூர்யாவிற்கு கங்குவா, ரெட்ரோ என அடுத்தடுத்து படங்கள் விமர்சன ரீதியாக பல சவால்களை சந்தித்து, வசூல் ரீதியாக தோல்வியை தழுவியது. இதனால் சினிமா கேரியரில் கடும் நெருக்கடியில் உள்ளார் சூர்யா. அடுத்து ஆர் ஜே பாலாஜி கூட்டணியில் விரைவில் வேட்டை கருப்பு படம் வெளிவர உள்ளது.

இப்படி இருக்கும் சூழ்நிலையில் வெற்றிமாறன் கூட்டணியில் வாடிவாசல் கைவிடப்பட்டுள்ளது என்பதற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது. சூர்யா சூதானமாக விரைவில் ஒரு ஹிட் படம் கொடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளார். இதற்காக பல சவாலான முயற்சிகளை எடுத்து வருகிறார்.

வெற்றிமாறன் ஏற்கனவே ஒரு சின்ன படம் என்றாலே இரண்டு வருடங்கள் எடுத்துக் கொள்வார் இதுல வாடிவாசல் போன்ற அதிக கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் உள்ள காட்சிகள் எடுப்பதற்கு குறைந்தபட்சம் மூன்று வருடங்கள் ஆவது ஆகிவிடும்.

இதனால் சூர்யாவின் சினிமா கேரியர் பாதிக்கும் என்பதால் வாடிவாசல் படத்திலிருந்து தற்போது விலகி உள்ளதாக கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கின்றன. அப்படியே வாடிவாசல் க்ளிக் ஆனாலும் அது PAN இந்தியா படமாக வர வாய்ப்பே இல்லை. இந்த முடிவு சரியானது தான் ஏனென்றால் குறைந்த பட்ஜெட்டில், குறைந்த நாட்களில் அதிகம் லாபம் கொடுக்கும் ஒரு படத்தை ஹிட் கொடுக்க வேண்டும் சூர்யா.

அவர் விலகிய பின் வெற்றிமாறன் சிம்புவை வைத்து வடசென்னை படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கான வேலையில் தீவிரமாக இறங்கிவிட்டார். நேற்று அதற்கான பிரமோ வீடியோ எடுக்கும்போது ஷூட்டிங் ஸ்பாட் இல் இருந்து ஒரு புகைப்படம் வெளியாகி வைரல் ஆனது.

அதில் சிம்புவுடன் நெல்சன் இணைந்து இருப்பது இன்னும் ஆச்சரியமாக உள்ளது. ஏனென்றால் நெல்சன் சிம்புவிற்காக வேட்டை மன்னன் என்ற படத்தை எடுக்க இருந்தது அது டிராப்பானதால் தற்போது மீண்டும் இணைந்துள்ள சம்பவம் கோலிவுட் வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. எது எப்படியோ தற்போது வெற்றிமாறன் சூர்யா வேறு வேறு பாதையில் செல்ல தொடங்கி விட்டனர்.