காவிரி வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு வரும் பிரச்சனை.. பயத்தில் இருக்கும் விஜய்

Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், வெண்ணிலா பிரச்சனை ஒரு பக்கம் இருந்தாலும் தற்போது காவிரி விஜய் காட்சிகள் அதிகமாக இருக்க வேண்டும் என்பதற்காக காவேரிக்கு அம்மம் போட்டு இருப்பது போல் கதை வர ஆரம்பித்துவிட்டது. இதனால் கங்கா கர்ப்பமாக இருக்கும் பொழுது ஒரே வீட்டில் வைக்கக் கூடாது என்பதற்காக விஜய் தங்கி இருந்த வீட்டிற்குள் காவிரி தனியாக தங்கி இருக்கிறார்.

இந்த விஷயத்தை கேள்விப்பட்டதும் காவிரியை பார்த்து பேச வேண்டும் என்பதற்காக விஜய் யாருக்கும் தெரியாமல் வீட்டிற்குள் போய்விடுகிறார். போனதும் காவிரிக்கு ஆறுதலாகவும் பாசத்தைக் காட்டும் விதமாகவும் பேசி கூடவே இருக்கிறார். அப்பொழுது காவேரி, வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு ஏதாவது பிரச்சினை வந்து விடுமோ என்ற பயம்தான் எனக்கு அதிகமாக இருக்கிறது என்று விஜய்யிடம் சொல்கிறார்.

விஜய்க்கும்அதே பயம் வந்த பொழுது காவிரியிடம் வெளி காட்டாமல் அதெல்லாம் ஒன்னும் ஆகாது, சந்தோசமாக இரு என்று சொல்கிறார். பிறகு வீட்டு ஓனரை விஜய் சந்தித்து பேசும் பொழுது அவர்களும் கர்ப்பமானவர்களுக்கு அம்மம் வருவது கொஞ்சம் ஆபத்து தான் என்று சொல்லிவிடுகிறார்கள். இதனால் பயந்து போன விஜய், டாக்டரிடம் போய் கேட்கலாம் என்று ஹாஸ்பிடலுக்கு போகிறார்.

அப்பொழுதும் விஜய் பயப்படும் அளவிற்கு தான் சில விஷயங்களை சொல்லுகிறார். இருந்தாலும் காவேரி எதைப் பற்றியும் யோசிக்காமல் சந்தோஷமாகவும் துருதுருவென்று இருந்தாலே போதும் என்று டாக்டர்கள் அட்வைஸ் பண்ண ஆரம்பித்து விட்டார்கள். உடனே விஜய் பயந்து போய் காவிரியுடன் பக்கத்திலேயே நாம் இருந்து சந்தோஷமாக பார்த்துக் கொள்ளலாம் என்று யாருக்கும் தெரியாமல் காவிரியுடன் தங்குவதற்கு தயாராகி விட்டார்.

யார் என்ன சொன்னாலும் காவேரி வயிற்றில் சுமக்கும் குழந்தைக்கு எந்த பிரச்சினையும் வராமல் காவிரி மற்றும் விஜய் இருவரும் சேர்ந்து பார்த்துக் கொள்வார்கள். இதனை அடுத்து வெண்ணிலா பிரச்சனை என்னவென்று தெரியாமல் கேள்விக்குறியாக நிற்கிறது. இதனால் விஜய் மற்றும் காவிரிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள்.