Dhanush: என் ரசிகர்கள் மேல யாரும் கை வைக்காதீங்க, என் ரசிகர்கள் இருக்கும் வரை என்னை யாராலும் எதுவும் பண்ண முடியாது. சமீப காலமாக உச்ச நடிகர்கள் சிலரின் பட இசை வெளியீட்டு விழாவின் போது வெளிவரும் பஞ்ச் டயலாக்குகள் தான் இது.
உண்மையிலேயே இந்த நடிகர்களுக்கு யாரு தான் எதிரி. ரசிகர்களை வச்சு யார எதிர்க்க போறாங்க. அவர்களுக்கு போட்டியாளராக இருக்கும் ஹீரோக்கள் வீட்டு விசேஷத்தில் கூட கைகுலுக்கி கலந்து கொள்கிறார்கள்.
அப்ப இசை வெளியீட்டு விழாவில் யாரைத்தான் குறிவைத்து பேசுகிறார்கள் என்ற சந்தேகம் வரலாம். உண்மையிலேயே இது எல்லாம் படத்தின் பிரமோஷன் வேலைகள் தான். தங்களுக்கு பிடித்தமான ஹீரோக்களுக்கு யாரோ எதிரி இருக்கிறார்கள்.
இந்த படத்தின் வெற்றி மூலம் அவர்களை தோற்கடித்து விடலாம் என்ற மாய பிம்பம் உருவாக்கப்படுகிறது. இப்படி ரசிகர்களை ஏத்தி விட்டு வேடிக்கை பார்க்கும் 5 ஹீரோக்களை பற்றி பார்க்கலாம்.
ஏத்திவிட்டு வேடிக்கை பார்க்கும் 5 ஹீரோக்கள்
விஜய்: இந்த லிஸ்டில் நம்பர் 1 இடத்தை பிடித்தவர் விஜய் தான். பிகில், பீஸ்ட், மாஸ்டர், என ஒரு குறிப்பிட்ட வருடத்திலிருந்து அவருடைய பட இசை வெளியீட்டு விழாக்கள் எப்படி நடக்கிறது என்பது எல்லோருக்குமே தெரியும்.
என் மேல கை வச்சா சும்மா இருப்பேன் ஆனா என் ரசிகர்கள் மேல கை வைக்காதீங்க என்று அனல் பறக்க பேசி இசை வெளியீட்டு விழா மேடையை அரசியல் முன்னோட்டம் மேடையாக மாற்றிய பெருமை இவரை சேரும்.
ரஜினி: மேடையில் பஞ்ச் டயலாக் பேசி பதற வைக்கும் ஹீரோக்களுக்கு எல்லாம் முன்னோடி ரஜினி தான். அவருடைய பட வெளியீட்டு விழாவின் போது குட்டி கதை சொல்வதில் இருந்து தொடங்கி, யாரையோ எச்சரிப்பது போல் எல்லாம் பேசி படத்தின் பிரமோஷன் விஷயத்தை கச்சிதமாக முடித்து விடுவார்.
சூர்யா: சூர்யா இந்த விஷயத்தில் கொஞ்சம் கத்துக்குட்டி என்று கூட சொல்லலாம். இயல்பிலேயே அதிகமாக பேசும் குணம் இல்லாதவர்.
இதனாலேயே இவருடைய ஆடியோ வெளியீட்டு விழாக்களின் போது இவர் பேசும் சில விஷயங்கள் ஏதோ நிர்பந்தத்தில் பேசுவது போலவே இருக்கும். மற்ற ஹீரோக்களின் மாயாஜால வேலையை கற்றுக் கொண்டு செய்து கொண்டிருக்கிறார்.
சிம்பு: சிம்பு 2020க்கு பிறகு தனக்கு கிடைக்கும் மேடையை பட ப்ரமோஷனுக்காக, தன்னுடைய நிலையான இடத்திற்காக சரியாக பயன்படுத்திக் கொள்கிறார்.
சிம்புவுக்கு யாரோ எதிராக இருந்து செயல்படுவது போலவும், அவருடைய ரசிகர்களின் ஆதரவால் சினிமாவில் போராடிக் கொண்டிருப்பது போலவும் தான் இப்போதெல்லாம் சித்தரிக்கப்படுகிறது.
தனுஷ்: தனுஷ் கடந்த சில வருடங்களாகவே தன்னுடைய ரசிகர்களிடையே கொளுத்தி போடும் வேலையை பக்காவாக பார்த்துக் கொண்டிருந்தார். அவர் பேசிய சில விஷயங்கள் ரசிகர்களால் அதிக அளவில் பாராட்டைப் பெற்றது.
ஆனால் சமீபத்தில் குபேரா ஆடியோ வெளியீட்டு விழாவின் போது எல்லை மீறி, தன்னை கூறு குட்டி ரஜினிகாந்த் என்று நினைத்துக் கொண்டு பேசியதுதான் அதிக கேள்விக்கு ஆளாகி இருக்கிறது.
உண்மையிலேயே தென் இந்திய சினிமாவை பொருத்தவரைக்கும் தனுஷை எதிர்ப்பவர்கள் என்று யாருமே கிடையாது. படத்தின் வெற்றிக்காக இப்படி ஒரு பிம்பத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்.