சமந்தா : நாகசைதன்யா மற்றும் சமந்தா இணைந்து நடித்து ஹிட்டான யே மாயா சேசாவே படம் ஜூலை 18ஆம் தேதி திரையரங்குகளில் ரீ ரிலீஸ் ஆகப்போகிறது. இந்நிலையில் இப்படத்தின் பிரமோஷனலில் மற்றும் நாக சைதன்யா மற்றும் சமந்தா கலந்து கொள்ளப் போவதாக செய்திகள் பரவி வருகிறது.
நாக சைதன்யா மற்றும் சமந்தா இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து திருமணம் செய்து நன்றாக வாழ்ந்து கொண்டிருந்த நிலையில். திடீரென ஒருவரை ஒருவர் விவாகரத்து செய்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இன்று வரையில் க்யூட்டான ஜோடி என்று மக்களிடையில் , நாக சைதன்யாவிற்கு திருமணம் நடந்ததற்கு பிறகும் பேசிக் கொண்டுதான் இருக்கின்றனர்.
இவர்களின் விவாகரத்தால் இவர்கள் பாதிக்கப்பட்டார்களோ இல்லையோ, இவர்களின் ரசிகர்கள் மிகவும் பாதிக்கப்பட்டார்கள். மற்றும் இன்று வரையில் இவர்களின் பிரிவை ரசிகர்களால் தாங்கவும் முடியவில்லை. இந்த நிலையில் ” யே மாயா சேசாவே” படத்தின் ரீ ரிலீஸ்-ன் ப்ரோமோஷனில் நாக சைதன்யா மற்றும் சமந்தா கலந்து கொள்வதாக பொய்யான வதந்தி பரவி வருகிறது.
மறுப்பு தெரிவித்த சமந்தா
இந்த செய்தியை ரசிகர்கள் கேட்டவுடன் உற்சாகத்தில் துள்ளிக் குதித்தனர் .இந்த செய்தி அறிந்து சமந்தா இந்த பொய்யான வதந்திகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதைப்பற்றி சமந்தா பேசுகையில் நான் யாரிடனும் சேர்ந்து பட பிரமோஷனல் கலந்து கொள்ளவில்லை என்றும், யே மாயா சேசாவே படத்தை நான் விளம்பரப்படுத்தவே இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இதைப் பற்றி எல்லாம் யார் பேசுகிறார் என்று தெரியவில்லை, இது போன்று பொய்யான வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் கூறியுள்ளார். உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் சமந்தா மிகவும் கஷ்டப்பட்டு தன் உடல்நிலையை சரிசெய்துகொண்டு வருகிறார். நடிப்பில், அழகில் மட்டுமில்லாமல் தன்னம்பிக்கையோடு எதிர்த்து போராடும் பெண்ணாகவும், பெண்களுக்கு நல்ல எடுத்துக்காட்டாகவும் திகழ்கிறார்.
இப்போது தமிழில் ரீசென்டாக எந்த படமும் நடிக்கவில்லை என்றாலும் தமிழ்நாட்டில் பெரும் ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார் சமந்தா என்பது குறிப்பிடத்தக்கது. அவர் தமிழில் ரீ என்ட்ரி கொடுக்க போகும் படத்திற்காக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.