மொக்கையாக இருக்கும் மகாநதி சீரியல், புதுசாக வரப்போகும் சீரியல்.. விஜய் டிவிக்கு அடித்த ஜாக்பாட்

Vijay Tv Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சில சீரியல்கள் தான் மக்களின் ஃபேவரிட் சீரியலாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் முதலிடத்தில் இருந்தது மகாநதி சீரியல் தான். ஆனாலும் டிஆர்பி ரேட்டிங்கில் அதிக புள்ளிகளை பெற முடியாமல் முதல் இடத்தை கைநழுவி விட்டு வருகிறது. அதிலும் இப்பொழுது சில காட்சிகள் சொல்லும் அளவிற்கு இல்லாமல் தொடர்ந்து மொக்கையாக தான் போய்க்கொண்டிருக்கிறது.

எப்பொழுது வெண்ணிலா கேரக்டர் புதுசாக வந்ததோ, அப்பொழுது இருந்து இந்த சீரியல் தடம் புரண்டு விட்டது. ஆனாலும் அவ்வப்போது பார்ப்பவர்களின் விருப்பத்திற்கு ஏற்ற மாதிரி விஜய் மற்றும் காவிரி கேரக்டருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து ஓரளவுக்கு கதையை ஓட்டிக்கொண்டு வருகிறார்கள்.

ஆனால் இப்படியே போனால் நம்முடைய பாதை மறந்து விடும் என்பதற்காக மகாநதி சீரியலின் இயக்குனர் பிரவீன் இன்னொரு சீரியலை புதுசாக ஆரம்பிப்பதற்கு தயாராகி விட்டார். ஏற்கனவே இவர் வீட்டுக்கு வீடு வாசப்படி என்ற சீரியலை எடுத்தார். ஆனால் அது எதிர்பார்த்தபடி இல்லாமல் செதப்பிவிட்டதால் அந்த சீரியலை அவசர அவசரமாக முடித்து விட்டார்கள்.

அதனால் மறுபடியும் ஒரு நல்ல கதையுடன் புது சீரியலை ஆரம்பிக்கலாம் என்று இயக்குனர் பிரவீன் முடிவெடுத்து இருக்கிறார். அந்த வகையில் செல்லம்மா சீரியல் மூலம் அறிமுகமான அன்ஷிதா, பிக் பாஸ் போன பிறகு கொஞ்சம் பிரபலமாகிவிட்டார். அவர்தான் பிரவீன் எடுக்க போகும் சீரியலுக்கு கதாநாயகியாக கமிட்டாகி இருக்கிறார். இவருக்கு ஜோடியாக நீ நான் காதல் சீரியலில் ராகவா கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஆக்டர் பிரேம் கமிட்டாகி இருக்கிறார்.

இவர்களைத் தொடர்ந்து மூன்று முடிச்சு சீரியலில் அர்ச்சனா கதாபாத்திரத்தில் நடித்து வரும் தர்ஷனாவும் கமிட்டாகி இருக்கிறார். இவர் ஏற்கனவே விஜய் டிவி சீரியலும் நடித்திருக்கிறார். இவர்கள் மூன்று பேரும் தான் முக்கியமான கதாபாத்திரத்தில் வரப்போகிறார்கள். இந்த சீரியலை குளோபல் வில்லேஜஸ் தயாரிக்கிறது. இன்னும் கூடிய விரைவில் இந்த சீரியல் மூலம் விஜய் டிவிக்கு புதுசாக டிஆர்பி ரேட்டிங் அதிகரிக்கப் போகிறது.