Ayyanar Thunai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற அய்யனார் துணை சீரியலில், நிலா ஒரு இன்டக்ஷன் அடுப்பை வாங்கிட்டு வந்து அதில் சமைக்க சொன்னார். ஆனால் அதற்கான பாத்திரம் வீட்டில் இல்லாத பட்சத்தில் சேரன், பழைய பாத்திரங்கள் அனைத்தையும் மூட்டை கட்டி மேலே வைத்திருக்கிறேன். அதை எடுத்து சமைக்கலாம் என்று சொல்லிய நிலையில் வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் மேலே இருந்த பழைய பொருட்களை எல்லாம் எடுக்கிறார்கள்.
அப்படி எடுத்து பார்க்கும் பொழுது சின்ன வயசில் பயன்படுத்திய பொருட்களை ஞாபகப்படுத்தி சேரன் சொல்கிறார். அப்பொழுது அந்த பெட்டியில் இருந்த பாத்திரங்கள் எதுவும் பயன்படுத்த முடியாத அளவிற்கு வம்பாகிவிட்டது. அதனால் நிலா அதெல்லாம் பயன்படுத்த வேண்டாம் என்று குப்பையில் போட சொல்லி விடுகிறார். பிறகு பழைய போட்டோக்கள் அனைத்தையும் நிலா மற்றும் பல்லவன் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
அப்பொழுது பல்லவன், அம்மா கூட நீங்க எல்லாரும் சேர்ந்து போட்டோ எடுத்து இருக்கீங்க. ஆனால் நான் மட்டும் ஏன் எடுக்கவில்லை என்று கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார். பல்லவன் கேட்ட கேள்விக்கு மூன்று அண்ணன்களும் தடுமாறி விட்டார்கள். அதனால் வேறு எந்த போட்டோவையும் பார்க்கவிடாமல் அந்த பாக்ஸை மூடி வைக்கலாம் என்று பாண்டியன் சொல்கிறார்.
இருந்தாலும் பல்லவன் கேட்காமல் ஒவ்வொரு போட்டோக்களையும் பார்க்கிறார். அப்படி பார்க்கும் பொழுது பல்லவன் மட்டும் ஒரு அம்மாவுடன் சேர்ந்திருக்கும் போட்டோவை பார்த்து இவங்க ஏன் என்னை தூக்கி வைக்க வேண்டும். இவங்க கூட சேர்ந்து நீங்க யாரும் போட்டோ எடுக்கல. என்னை மட்டும் ஏன் தூக்கி வைக்க வேண்டும், எனக்கு இவங்களை பார்த்தாலே பிடிக்கவில்லை கோபமாக வருகிறது என்று கேள்வி கேட்கிறார்.
அப்பொழுது அங்கே வந்த நடேசனின் சட்டையை பிடித்து இந்த அம்மா யாரு, இவங்க ஏன் என்னை தூக்கி வைக்கணும் என்று கேள்வி கேட்கிறார். இதை சமாளிக்க முடியாத நடேசன், இவங்கதான் உன்னுடைய அம்மா. எப்படி சேரன் சோழன் பாண்டியனை அவங்க அம்மா சாந்தி பக்கத்தில் நிற்க வைத்து போட்டோ எடுத்தாலோ, அதே மாதிரி உங்க அம்மா உன்னை தூக்கி வைத்து போட்டோ எடுத்திருக்கிறார் என்று சொல்லிவிடுகிறார்.
அப்பொழுதுதான் பல்லவனுக்கு புரிந்தது, வேறு ஒரு தாய்க்கு பிறந்தவன் என்று. அத்துடன் சேரனை பார்த்து நான் உங்க கூட பிறக்கவில்லையா? உங்க கூட பிறந்த தம்பி இல்லையா என்று ரொம்பவே ஃபீல் பண்ணும் அளவிற்கு பேசுகிறார். அந்த நேரத்தில் தன் அனாதை போல் பல்லவன் பீல் பண்ணியதால் வீட்டை விட்டு போய்விடுகிறார்.
பிறகு நேரம் ஆகியும் வீட்டுக்கு வராததால் நிலா, சேரன் சோழன் பாண்டியனுக்கு போன் பண்ணி பல்லவன் இன்னும் வீட்டுக்கு வரவில்லை என்று சொல்கிறார். உடனே பரிதவித்துப் போன மூன்று அண்ணன்களும் பல்லவனை தேடி அலைகிறார்கள். எப்படியும் பல்லவனை கண்டுபிடித்து வீட்டிற்கு கூட்டிட்டு வந்து சமாதானப்படுத்தி விடுவார்கள். இதில் நிலாவும் பல்லவனை நினைத்து ரொம்பவே வருத்தமாக இருக்கிறார்.
இந்த ஒரு திருப்பத்தை எதிர்பார்க்கவே இல்லை, இந்த ஒரு சீரியல் தான் உயிரோட்டமாக இருக்கிறது என்று மக்கள் விரும்பி பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். அந்த வகையில் வரப்போகிற வாரங்களில் அய்யனார் துணை சீரியல்தான் விஜய் டிவியில் அதிக பள்ளிகளை பெற்று டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடிக்கப் போகிறது.