குபேரா படத்தின் ப்ரோமோஷன் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கும் சூழ்நிலையில் நாளை உலகம் எங்கும் ரிலீஸ் ஆக உள்ளது. சேகர் கம்புல்லா இயக்கத்தில் ராஷ்மிகா, நாகார்ஜுனா போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
சமீபத்தில் குபேரா மேடையில் தனுஷ் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதுவும் குறிப்பாக சிம்புவை தாக்குவது போன்ற நான் சினிமாவிற்காக நேந்து விட்டவன் அல்ல. ஏதோ எங்க அப்பா சினிமாவில் இழுத்துக் கொண்டு வந்து விட்டுட்டாரு அண்ணன் செல்வா என்னை ஒரு நட்சத்திரமாக மாற்றினார்.
அப்படி படிப்படியாக தான் சினிமாவில் பல தடைகளை தாண்டி தற்போது இந்த மேடையில் வந்து நிற்கிறேன். சிம்பு தன்னை சினிமாவிற்காகவே பிறந்தவன் ரசிகர்களை கடைசிவரை உற்சாகப்படுத்திக் கொண்டே இருப்பேன் என்று சமீபத்தில் கூறியிருந்தார்.
இப்படி இருக்கும் பட்சத்தில் ஏதோ ஒரு ஆவேசத்தில் தனுஷ் சிம்புவை தாக்கி பேசி விட்டதாக சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க வெறி பிடித்த தனுஷ் ரசிகர் ஒருவர் தனுஷ் அனுபவித்த கஷ்டங்களை ஆதங்கமாக பதிவிட்டு வெளிப்படுத்தி உள்ளார்.
எவன் வீட்ல என்ன நடந்தாலும் தனுஷ் தனுஷ்னு மீம் போடும் போது சுகமா இருந்துச்சா ? இப்ப அதுக்கு பதில் சொன்னா எரியுதா ? நல்லா எரியட்டும் இன்னும் ஒரே நாள்ல பாக்ஸ் ஆபிஸ் எரியும்! தற்போது புக் மை ஷோவில் கடந்த 24 மணி நேரத்தில் 29 ஆயிரம் டிக்கெட்டுகளுக்கும் மேலே புக்கிங் ஆகி உள்ளது.
இன்னும் Inox, PVR போன்ற திரையரங்குகளில் ஸ்கிரீன்கள் திறக்கப்படவில்லை. முதல் நாள் விமர்சனத்தை வைத்து வசூல் ரீதியாக தனுஷ் பல சாதனைகளை உடைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் ஆவேசமாக இந்த மாதிரி மேடைப்பேச்சு பல இடங்களில் பேசும் பொருளாக மாறி உள்ளது, இதனை தனுஷ் மாற்றிக் கொண்டால் நல்லாயிருக்கும்.