Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில் கதை பெருசாக சொல்லும் படி எதுவும் இல்லை. இருந்தாலும் மக்களின் ஃபேவரிட் என்றால் அது விஜய் மற்றும் காவிரியின் கெமிஸ்ட்ரி தான். அதனால் இப்போதைக்கு அதை மட்டுமே வைத்து உருட்டிக்கொண்டு போகலாம் என்று விஜய் காவிரிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வெண்ணிலா பசுபதி கேரக்டரை டீலில் விட்டு விட்டார்கள்.
இதற்கு காரணம் இந்த சீரியலை எடுத்து வரும் இயக்குனர் பிரவீன், தற்போது புது சீரியலை எடுப்பதற்கு அதிக கவனத்தை செலுத்தி வருகிறார். அதனால் கொஞ்ச நாள் அந்த சீரியல் ஆரம்பிக்கும் வரை இயக்குனர் புது சீரியலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்த வருவதால் மகாநதி சீரியலில் ஃபேவரிட் ஆக இருக்கும் விஜய் காவேரிக்கு தான் இனி காட்சிகள் அதிகரிக்கும்.
ஏனென்றால் இவர்கள் காட்சிகள் இருந்தாலே போதும் மக்கள் தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருவார்கள் என்பதால் அதற்கான கதைகள் நகர்கிறது. தற்போது பசுபதியை தேடி அலையும் விஜய், இன்னொரு பக்கம் காவிரிக்கு உடம்பு சரியில்லை என்றதும் கூடவே இருந்து பார்ப்பது போல் அக்கறை காட்டி வருகிறார்.
அத்துடன் தன்னுடைய கடையை இப்படி இடித்து பிரச்சனையை ஏற்படுத்திய பசுபதியை சும்மா விடமாட்டேன் என்று குமரனும் கோபத்தில் கொந்தளிக்கிறார்.
இவர்களுக்கு சப்போர்ட்டாக நவீன் ஆஸ்பத்திரிக்கு வந்து வெண்ணிலவை பார்ப்பதற்கு பசுபதி வந்தாரா என்று விசாரிக்கிறார். அப்பொழுது குமரனும் கூடவே இருப்பதால் விஜய் அங்கே வந்து நவீனிடம் பசுபதி பற்றி கேட்கிறார். யார் எப்படி போனாலும் காவேரி, விஜய் காட்டும் அன்புக்கு அடிமையாகி இருக்கிறார்.
இதற்கெல்லாம் விடிவு காலம் பிறக்க வேண்டும் என்றால் வெண்ணிலா கண் விழிக்க வேண்டும். மொட்டை மாடியில் இருந்து கீழே தள்ளி விட்டது பசுபதி என்று சொல்லணும். அப்பொழுதுதான் பசுபதி ஜெயிலுக்கு போவார், வெண்ணிலாவும் விஜயை பற்றி புரிந்து விஜய் காவேரி உடன் சேர்த்து வைப்பார். அத்துடன் வெண்ணிலா, மாமா உடனே கிராமத்துக்கு போய் விடுவார்.