ரோகினியின் ஆட்டம் கிளோஸ், வெளிவரப் போகும் க்ரிஷ் ரகசியம்.. மீனாவிற்கு முத்து மூலம் வரும் பிரச்சினை

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், விஜயாவை ஜோசியக்காரர் மூலம் ரோகிணி நினைத்தபடி மடக்கிவிட்டார். அதனால் விஜயா, ரோகிணி மற்றும் மனோஜை கூப்பிட்டு ஆசீர்வாதம் செய்து ரெண்டு பேரும் சந்தோஷமாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் நான் ஆசைப்பட்ட மாதிரி நீ பணக்காரியாகவும் மாற வேண்டும். என் பிள்ளையின் பிசினஸை டபுள் மடங்கு லாபத்துடன் கொண்டு வர வேண்டும் என்று சொல்லிவிடுகிறார்.

உடனே மனோஜ் மற்றும் ரோகினி சந்தோசப்பட்டு சரி என்று சொல்லி ஒன்றாக ஷோரூமுக்கு கிளம்பி விட்டார்கள். அப்பொழுது சிந்தாமணியின் பங்க்ஷனுக்கு போவதற்காக பார்வதி மற்றும் விஜயா இருவரும் தாவணி கட்டிட்டு வந்ததால் குடும்பத்தில் இருப்பவர்கள் காமெடியாக பார்த்து நக்கல் அடிக்க ஆரம்பித்து விட்டார்கள். ஆனாலும் இது எதையும் கண்டுகொள்ளாமல் விஜயா மற்றும் பார்வதி சிந்தாமணி வீட்டிற்கு போய்விட்டார்கள்.

அடுத்ததாக ஷோரூம் வந்த ரோகினி, மனோஜிடம் நாம் இருவரும் சேர்ந்து கொடைக்கானல் போக வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை எல்லாம் நான் பண்ணி விட்டேன் என்று சொல்கிறார். உடனே மனோஜ், அம்மாவிடம் பெர்மிஷன் கேட்க வேண்டும் என்று சொல்லிய நிலையில் ரோகிணி அதெல்லாம் பேசி சமாளித்துக் கொள்கிறேன் என்று சொல்லிவிடுகிறார்.

அந்த சமயத்தில் க்ரிஷ் பாட்டி, ரோகிணிக்கு போன் பண்ணி க்ரிஷ் அதிகமாக மார்க் எடுத்து பாஸ் பண்ணி விட்ட விஷயத்தை சொல்லி சந்தோஷப்படுகிறார். உடனே ரோகிணி, க்ரிஷ் கிட்ட பேசும் பொழுது உன்னை பார்க்க வேண்டும் வீட்டிற்கு வருகிறாயா? என்று க்ரிஷ் கூப்பிடுகிறார். அப்பொழுது ரோகிணியும் வீட்டுக்கு வருகிறேன் என்று சொல்லுகிறார்.

உடனே மனோஜிடம் ஒரு கிளைன்ட் விஷயமாக நான் பார்த்து பேசிட்டு வருகிறேன் என்று சொல்கிறார். ஆனால் மனோஜ் இன்னைக்கு நீ என்னை விட்டு எங்கேயும் போகக்கூடாது. என் கூட தான் இருக்கணும் என்று சொல்லியதால் ரோகிணி கிரிஷுக்கு போன் பண்ணி வர முடியாது என்று சொல்லிவிடுகிறார். அடுத்ததாக விஜயா, பிறந்தநாள் பங்க்ஷனில் திருட்டு செயினால் அவமானப்பட்டதால் வீட்டிற்கு வந்து ரோகினிடம் மொத்த கோபத்தையும் காட்டுகிறார்.

இதனைத் தொடர்ந்து ரோகிணி போட்ட கணக்கு எல்லாம் தோல்வியாக போகிறது என்பதற்கு ஏற்ப ரோகிணியின் ஆட்டம் கிளோஸ் ஆகிறது. இது மட்டும் இல்லாமல் ரோகிணி தான் க்ரிஷ் அம்மா என்ற விஷயமும் வெளிவரப் போகிறது. அதே மாதிரி சீதா அருண் ரிஜிஸ்டர் மேரேஜ் விஷயத்தில் முத்துவிடம் மீனா மாட்டிக் கொண்டு பிரச்சனையில் தவிக்கப் போகிறார்.