Ayyanar Thunai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற அய்யனார் துணை சீரியலில், நடேசன் சொன்ன உண்மையால் பல்லவன் அதிர்ச்சியில் இருக்கிறார். சேரன் சோழன் பாண்டியன் அண்ணன்கள் கூட நான் பிறந்தவன் இல்லை. என்னுடைய அம்மா வேறு யாரோ என்று புலம்பி பல்லவன் பீல் பண்ண ஆரம்பித்து விட்டார். ஆனால் இந்த உண்மை ஏற்கனவே சேரன் சோழன் பாண்டியனுக்கு தெரிந்தும் பல்லவனிடம் சொல்லாமல் பாசத்தைக் காட்டி வந்திருக்கிறார்கள்.
ஆனால் தற்போது நடேசன் மூலம் பல்லவனுக்கு எல்லா உண்மையும் தெரிந்து விட்டது. இதனால், தான் ஒரு அனாதை என்றும் தன் கூட பிறந்தவங்க யாரும் இல்லை எனவும் பீல் பண்ண ஆரம்பித்து விட்டார். பல்லவன் பீல் பண்ணுவதை பார்த்து சேரன் சோழன் பாண்டியன் 3 பேரும் சேர்ந்து சமாதானப்படுத்தி விட்டார்கள். அதிலும் சோழன், நிலாவிற்கு உண்மை சொல்லும் விதமாக எங்களுடைய அம்மா இறந்து போன பிறகு அப்பா ரொம்ப நாள் ஆகியும் வீட்டிற்கு வரவில்லை.
பிறகு திடீரென்று வீட்டிற்கு வந்த நிலையில் ஒரு பெண்ணுடன் வந்து இறங்கினர். அந்தப் பெண் கையில் பல்லவன் சின்ன குழந்தையாக இருந்தார். அந்த வயதில் எங்களுக்கு எதுவும் விவரம் தெரியாத பொழுது ஊரில் இருப்பவர்கள் தான் என்னுடைய அப்பா வேறு யாரையும் கூட்டிட்டு வந்து ஒரு குழந்தையை கொடுத்திருக்கிறார் என்று புரிந்தது. அதன் பிறகு எங்க அப்பா கூட்டிட்டு வந்த அந்த அம்மாவும் சொல்லாமல் எங்கேயோ போய் விட்டார்கள்.
பிறகு எல்லாரும் செஞ்ச தவறுக்கு பல்லவன் என்ன பண்ணுவான் என்று நாங்கள் மூன்று பேரும் மொத்த பாசத்தையும் காட்டி எங்களுடைய கூட பிறந்த தம்பியாக தான் பார்த்து வந்தோம். எந்த உண்மை பல்லவனுக்கு தெரியக்கூடாது என்று மறைத்து வைத்தோமோ அதுவே இப்பொழுது தெரிந்து விட்டது என்று சொல்கிறார். பிறகு எல்லோரும் பல்லவனை சமாதானப்படுத்தி விட்டார்கள்.
அடுத்து பல்லவன் காலேஜுக்கு கிளம்பி போய்க் கொண்டிருக்கும் பொழுது நடேசனை பார்க்கிறார். அப்பொழுது பல்லவன், ஏன் என்னிடம் உண்மையை சொல்லாமல் வைத்திருந்தீர்கள். நான் சேரன் சோழன் பாண்டியன் அண்ணன் கூட பிறந்தவன் என்று உரிமையாக எல்லாத்தையும் கேட்டு அவங்களை கஷ்டப்படுத்தினேன். முன்னாடியே தெரிந்திருந்தால் நான் கொஞ்சம் ஒதுங்கி இருந்திருப்பேன் என்று கோபமாக கேட்கிறார்.
அதற்கு நடேசன், தெரிந்தால் மட்டும் என்னத்தை பண்ணி இருப்பாய் என்று கோபமாக பதில் சொல்கிறார். இதனால் விரக்தியில் பல்லவன் காலேஜில் இருந்து பாதியிலேயே கிளம்பி விடுகிறார். பிறகு நேரம் ஆகியும் வீட்டிற்கு வராததால் நிலா அனைவருக்கும் போன் பண்ணி பல்லவனை தேடிப் பார்க்க சொல்கிறார். அதன்படி மூன்று அண்ணன்களும் பல்லவனை தேடி அலைகிறார்கள். பல்லவன் எங்கே போனார் என்று தெரியாமல் அண்ணன்கள் தவித்து வருகிறார்கள்.