Singapenne: சிங்க பெண்ணே சீரியலில் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட கேரக்டர் துளசி. இதற்கு காரணம் அன்பு மற்றும் ஆனந்தி இருவரின் காதலுக்கும் பெரிசாக ஆப்பு வைக்க இந்த கேரக்டர் வரும் என்பதால்.
அன்புக்கு சொந்த மாமா மகள், அன்பு அப்பாவின் கடைசி ஆசை என்பதால் அன்பு துளசி திருமண ஏற்பாடுகளால் இவர்களுக்குள் ஏற்படும் சிக்கலை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து இருந்தார்கள்.
துளசியின் முழு பையோகிராபி
நிச்சயதார்த்தம் வரை வந்து பின்னர் அன்பு நான் ஆனந்தியை தான் காதலிக்கிறேன் என்று சொன்ன பிறகு கூட துளசி கேரக்டர் உள்ளே வரவில்லை. ஒரு சில எபிசோடுகளுக்கு முன்னால் இந்த துளசி கேரக்டரில் வந்த போது பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அன்பு மற்றும் ஆனந்தி காதலுக்கு ஆதரவு தெரிவித்து வில்லியாக வேண்டிய துளசி இப்போது சப்போர்ட்டிங் கேரக்டர் ஆகிவிட்டார். இருந்தாலும் ரசிகர்களிடையே யார் இந்த புது நடிகை என்ற கேள்வி அதிகமாக இருந்தது.
சிங்க பெண்ணே சீரியலில் துளசி கேரக்டரில் நடித்துக் கொண்டிருப்பவரின் பெயர் பூஜிதா. இவருக்கு சொந்த ஊர் கர்நாடக மாநிலம். கல்லூரி படிப்பை முடித்த இவர் சினிமாவில் அதிக ஆர்வம் இருந்ததால் நிறைய போட்டோ சூட்டுகள் நடத்தி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு கொண்டிருந்தார்.
இதன் மூலம் இவருக்கு ரித்து என்னும் குறும்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததோடு அதற்காக விருதும் கிடைத்தது. இதன் பின்னர் தொடர்ந்து நிறைய சீரியல்களில் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதில் சாம்பவி என்ற கன்னட சீரியல் இவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது.
மேலும் உதயா சேனலில் சிவோம் என்ற சீரியலிலும் நடித்து புகழ்பெற்றார். இந்த சீரியல்களின் மூலம் தான் பூஜிதாவிற்கு சிங்க பெண்ணே சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது