சர்ச்சையை கிளப்பிய சிங்கப்பெண்ணே சீரியல் எபிசோட்.. மவுசு கொறஞ்ச நேரத்துல இதெல்லாம் தேவையா பாஸ்!

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியல் எபிசோடு பெரிய சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. ஏற்கனவே இந்த சீரியலின் கதைப்போக்கு பிடிக்காததால் ரசிகர்கள் தங்களுடைய அதிருப்தியை பெரிய அளவில் தெரியப்படுத்தி வருகிறார்கள்.

அன்பு- ஆனந்தி- மகேஷ் என்ற முக்கோண காதல் கதையை தான் அவர்கள் எதிர்பார்த்தது. சம்பந்தமில்லாமல் இதில் ஆனந்தி கர்ப்பமாக இருப்பதாக கிளப்பி விட்டிருப்பது தான் அதிருப்திக்கு காரணம்.

சர்ச்சையை கிளப்பிய சிங்கப்பெண்ணே

அது மட்டுமில்லாமல் தன்னுடைய கர்ப்பத்துக்கு யார் காரணம் என ஆனந்தி கண்டுபிடிப்பதும், கர்ப்பமாக இருப்பதால் அன்புவை ஒதுக்குவதும் என கடந்த இரண்டு மாதங்களாக இழுவையாக இழுத்துக் கொண்டிருக்கிறது.

இப்படி ஏற்கனவே சீரியல் தன்னுடைய மவுசை இழந்து கொண்டிருக்கும் நேரத்தில் தான் அந்த சர்ச்சைக்குரிய காட்சிக்கான ப்ரோமோ வெளியானது. அதாவது ஆனந்தி எந்த தவறும் செய்யாமல் அவளுக்கு என்ன நடந்தது என்று கூட தெரியாத சூழ்நிலையில் கர்ப்பம் அடைந்து இருக்கிறாள்.

இதனால் இந்த கர்ப்பம் அவளுக்கு தேவை இல்லை என ரெஜினா, காயத்ரி மற்றும் சௌந்தர்யா முடிவெடுக்கிறார்கள். இதற்காக பணம் வாங்கிக் கொண்டு கருவை கலைக்கும் மருத்துவர் தேடி செல்கிறார்கள்.

அங்கே ஏற்கனவே நிறைய திருமணம் ஆகாத பெண்கள் இதற்காக காத்திருக்கிறார்கள். இந்திய நாட்டை பொறுத்த வரைக்கும் கர்ப்பத்தை கலைப்பது என்பது சட்டத்திற்கு புறம்பான ஒன்று.

அப்படி இருக்கும்போது அப்படிப்பட்ட காட்சியையும் வைத்து கர்ப்பத்தை கலைக்க திருமணம் ஆகாத பெண்கள் வருவது போலவும் காட்டுவதால் இந்த எபிசோடுக்கு பெரிய அளவில் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.