Ayyanar Thunai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற அய்யனார் துணை சீரியலில், பல்லவன் கடற்கரையில் இருக்க வாய்ப்பு இருக்கிறது என்று நிலா சோழனுக்குச் சொன்ன ஐடியாவின் படி சேரனும் சோழனும் கடற்கரைக்கு போய் பார்க்கிறார்கள். நிலா சொன்னபடி பல்லவன் தனியாக இருந்து கடற்கரையில் பீல் பண்ணிக் கொண்டிருந்தார். அப்பொழுது அங்கே போன சேரன் சோழன், பல்லவன் மீது மொத்த பாசத்தையும் காட்டி வீட்டிற்கு கூட்டிட்டு வருகிறார்கள்.
வீட்டிற்கு வந்ததும் பாண்டியன் மற்றும் நிலாவும் பல்லவனை பார்த்த சந்தோஷத்தில் செண்டிமெண்டாக பேசுகிறார்கள். அடுத்ததாக அனைவரும் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது சேரனுக்கு ஒரு சின்ன சந்தேகம். இரவு நேரத்தில் பல்லவன் மன கஷ்டத்தில் எங்கேயாவது எழுந்து போய் விடுவானோ என்று. அதனால் பல்லவன் காலையும் சேரன் காலையும் சேர்த்து ஒரு துணியை வைத்து கட்டி விடுகிறார்.
அப்படி கட்டும் பொழுது நிலாவும் அதை பார்த்து விடுகிறார், பல்லவனும் முழித்து விடுகிறார். பிறகு பல்லவன் இனி நான் உங்களை கஷ்டப்படுத்தும் படி எங்கேயும் போகமாட்டேன். இந்த வீட்டில் உங்க கூட தான் இருப்பேன், நீங்க இல்லாமல் நானும் இருக்க மாட்டேன். என்னை விட்டு நீங்களும் இருக்க மாட்டீங்க என்று எனக்கு புரிந்து விட்டது.
அதனால் பயமில்லாமல் தூங்குங்க என்று சேரனிடம் சொல்கிறார். இதை எல்லாம் பார்த்த நிலாவிற்கு அவங்க குடும்பத்தில் இருக்கும் பொழுது பாசமாக இருந்த தருணங்களை யோசித்து சந்தோஷப்பட்டு கொள்கிறார். அடுத்ததாக பல்லவனை நிலா கோவிலுக்கு கூட்டிட்டு போய் சேரன் சோழன் பாண்டியன் மூன்று பேரும் உன்னிடம் பாசமாக இருந்ததை மட்டும் யோசித்துப் பாரு.
அவங்க உன்னை வேறொரு தாயின் மகனாக பார்க்கவில்லை, கூடப்பிறந்த தம்பியாக தான் பார்க்கிறார்கள். அதனால் நீ எதை நினைத்தும் பீல் பண்ணாமல் சந்தோசமாக இரு என்று பல்லவனுக்கு ஒரு நல்ல அண்ணியாக நிலா அட்வைஸ் பண்ணுகிறார். அடுத்ததாக நிலா, இவ்வளவு நாளாக படித்த சர்டிபிகேட் இல்லாமல் கஷ்டப்பட்டு வேலைக்கு போக முடியாமல் தவித்து வந்தார்.
இதையெல்லாம் சரி செய்யும் விதமாக சோழன் மூலம் நிலாவுக்கு ஒரு விடிவு காலம் பிறந்து விட்டது. அந்த வகையில் நிலாவுக்கு புதுசாக சர்டிபிகேட் வாங்கும் விதமாக சோழன் சில ஏற்பாடுகளை செய்திருந்தார். அதன் மூலம் நிலா ஆசைப்பட்ட மாதிரி நிலாவின் கையில் சர்டிபிகேட் கிடைத்துவிட்டது. அந்த சர்டிபிகேட் பார்த்ததும் நிலாவுக்கு பேர் ஆனந்தம் ஆகிவிட்டது, உடனே சோழனுக்கு கை கொடுத்து நன்றியை தெரிவித்து விடுகிறார்.
இனி கொஞ்சம் கொஞ்சமாக நிலா ஆசைப்பட்ட லட்சியத்தை அடைந்து சோழன் குடும்பத்தையும் முன்னேறி காட்டி ஒரு பொறுப்பான குடும்பமாக மாற்றி ஊர் காரங்க முன்னாடி கெத்தாக இருக்க வைப்பார்.