Ethirneechal 2: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் 2 சீரியலில், குணசேகரன் ஏற்பாடு பண்ணிய கல்யாணத்தில் இஷ்டம் இல்லாமல் வீட்டை விட்டு தர்ஷன் கொடைக்கானல் பக்கம் போய்விட்டார். ஏற்கனவே அங்கேதான் ஜீவானந்தமும் இருக்கிறார். அதே இடத்திற்கு தான் பார்க்கவியும் அவருடைய அப்பாவை கூட்டிட்டு போயிருக்கிறார்.
தற்போது பார்க்கவியும் தர்ஷனும் கொடைக்கானலில் இருந்தாலும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளாமல் இருக்கிறார்கள். தர்ஷன் அங்கே இருக்கும் ஒரு கடைக்காரர் மூலம் அவருடைய வீட்டில் தங்கி கொள்கிறார். அதே கடைக்காரர்தான் பார்கவிக்கும் உதவி செய்திருந்தார். தற்போது அறிவுக்கரசி, தர்ஷன் மற்றும் பார்க்கவியை தேடிக்கொண்டு வருகிறார்கள்.
அந்த வகையில் பார்க்கவி குடும்பத்தையே காலி பண்ண வேண்டும் என்று அறிவுக்கரசி கங்கணம் கட்டிக்கொண்டு அலைகிறார். அதனால் தர்ஷனும் அங்கே இருக்கிறார் என்று தெரிந்தால் அறிவுக்கரசி நிச்சயம் இவர்களை சும்மா விட மாட்டார். ஆனால் இவர்களுக்கு ஆபத்து வரும் பொழுது சரியான நேரத்தில் ஜீவானந்தம் உள்ளே புகுந்து தர்ஷனையும் பார்க்கவியையும் காப்பாற்றி விடுவார்.
ஜீவானந்தத்தை தவறாக பேசிய தர்ஷன், ஜீவானந்திடம் மன்னிப்பு கேட்டு தர்ஷினி மாதிரி அப்பாவாக ஏற்றுக்கொண்டு தஞ்சம் அடைந்து விடுவார். பிறகு ஜீவானந்தம் இவர்களை காப்பாற்றும் பொறுப்பாக பார்க்கவி மற்றும் தர்ஷனை மேல் படிப்பை படிக்க வைப்பதற்காக முயற்சி எடுப்பார். இதற்கிடையில் வீட்டில் பூட்டி போட்டு இருந்த பெண்களிடம் அராஜகம் பண்ணும் விதமாக குணசேகரன் துப்பாக்கியை காட்டி மிரட்டுகிறார்.
என்னை மீறி இனி வெளிய போய் என்ன ஆட்டம் போடுகிறீர்கள் என்று பார்க்கிறேன் என்று துப்பாக்கியால் எல்லாரையும் அதட்டி வீட்டுக்குள்ளேயே அடக்கி வைத்து விட்டார். இன்னொரு பக்கம் கதிர் ஞானம் மற்றும் சக்தி அனைவரும் தர்ஷனை தேடிக் கொண்டு அலைகிறார்கள்.
ஈஸ்வரிக்கு சப்போர்ட்டாக பேசிய குணசேகரனிடம் தர்ஷினி அடி வாங்கிய தான் மிச்சம். ஒரு பிரயோஜனமும் இல்லை என்பதற்கு ஏற்ப நான்கு மருமகளுடன் சேர்ந்து அடிமையாக தர்ஷினி தாரா அனைவரும் அடங்கிப் போய்விட்டார்கள்.