பிறந்தநாளில் ரசிகர்களை கண்டுக்காத விஜய்.. என்ன தலைவா இதெல்லாம்

Vijay: விஜய் பிறந்தநாள் பரபரப்பு இன்னும் அடங்கவில்லை. நேற்று அவர் தன் 51வது பிறந்த நாளை கொண்டாடினார். அதற்கு எல்லோரும் வாழ்த்து தெரிவித்தார்கள்.

அதேபோல் ரசிகர்களும் அவருடைய வீட்டு வாசலில் மணிக்கணக்காக காத்திருந்தனர். ஆனால் விஜய் அவர்களுக்கு தரிசனம் கொடுக்கவில்லை என்பதுதான் இப்போதைய பெரும் குற்றச்சாட்டாக உள்ளது.

இதனைக்கும் வேறு வேறு ஊர்களில் இருந்து வெகு தொலைவில் பயணம் செய்து வந்தவர்கள் ஏராளம். அவர்கள் வீட்டு வாசலில் திரண்டிருந்தும் கூட விஜய் வராதது ஏனென்று தெரியவில்லை.

என்ன தலைவா இதெல்லாம்

அது மட்டும் இன்றி அவர் வீட்டிற்குள் தான் இருந்ததாகவும் கூறுகின்றனர். அப்படி இருந்திருந்தால் அவர் வராமல் போயிருப்பாரா என்பது ஒரு பக்கம் இருக்கிறது.

ஆனால் ஒரு ரெண்டு நிமிஷம் ஒதுக்கி எங்களை பார்க்க முடியாதா என்ற ஆதங்கம் ரசிகர்களுக்கு அதிகமாகவே இருக்கிறது. அதில் சிலர் ஒரு படி மேலே போய் எங்கள பார்க்க வீட்டுக்குள்ள இருந்து வெளியில் வரல.

அப்புறம் எதுக்கு நாங்க ஓட்டு போடணும் என அடுத்த வருட தேர்தலை குறித்தும் பேசியுள்ளனர். அந்த வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகிறது.

அதே போல் த்ரிஷா விஜய் உடன் எடுத்துக் கொண்ட போட்டோவை பகிர்ந்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருந்தார். அவங்கள பார்க்க போறதுக்கு டைம் இருக்கு எங்கள பார்க்க நேரம் இல்லையா என இந்த விவகாரமும் ரசிகர்களை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது.

இப்படியாக விஜய் பிறந்தநாள் அதுவுமாக ஒரு சர்ச்சையில் சிக்கிவிட்டார். இது எதிர் தரப்பு அரசியல் தொண்டர்களுக்கு வசதியாக போய்விட்டது என்பதுதான்.