வீரா சீரியலில் விஜி போடும் திட்டத்தை முறியடிக்கும் கண்மணி.. வேடிக்கை பார்க்கும் மாறன் வீரா

Veera Serial: ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வருகின்ற வீரா சீரியலில், வீரா மற்றும் மாறன் புது பிசினஸை ஆரம்பித்து விட்டார்கள். அந்த பிசினஸ்க்கு வள்ளி டெக்ஸ்டைல்ஸ் என்று பெயர் வைத்ததால் வள்ளிக்கு ரொம்பவே சந்தோஷம். ராமச்சந்திரனுக்கும் தன்னுடைய பிள்ளை எடுத்து வைத்த முயற்சியில் வெற்றி பெறுவதை பார்த்து அதிக பேரானந்தம் கிடைத்துவிட்டது.

இந்த சந்தோஷத்தை வீட்டுக்கு வந்து அனைவரும் பேசிக்கொள்ளும் பொழுது வள்ளியத்தை எதேர்ச்சியாக வாய் தவறி சில வார்த்தைகளை விட்டுவிட்டார். இந்த வீட்டில் இருப்பவர்கள் யாரும் என்னை புரிந்து கொள்ளவில்லை. ஒரு வேலைக்காரி மாதிரி தான் நினைக்கிறீர்கள். ஆனால் வீரா மட்டும்தான் என்னை முதலாளியாக பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டு இருக்கிறாள் என்று சொல்லிவிடுகிறார்.

இதை கேட்டதும் கோபப்பட்ட ராகவன், வீரா மற்றும் மாறனை தூக்கி கொண்டாடு. அதற்காக எங்க எல்லாத்தையும் மட்டம் தட்டி பேசாத என்று திட்டி விடுகிறார். அதே மாதிரி கார்த்திக்கும் கால் கொஞ்சமாவது தரையில் நிக்கட்டும் வானத்தில் பறப்பது போல் வார்த்தையே விடாதே என்று கோபமாக பேசி விடுகிறார். ராமச்சந்திரன், உன் மனசுல இருக்கிற தான் வெளியே வந்திருக்கிறது.

அப்படி என்றால் இவ்வளவு நாளாக நான் உன்னை அப்படி தான் நடத்திருக்கிறேனா என்று நினைக்கும் பொழுது எனக்கு ரொம்பவே கஷ்டமாக இருக்கிறது என்று ஃபீல் பண்ணி பேசுகிறார். ஆனால் வள்ளி, நான் சும்மா ஏதோ பேச வாய் தவறி வந்து விட்டது. நான் வேண்டுமென்று எதையும் சொல்லவில்லை என்று சொல்லிவிடுகிறார். அடுத்ததாக ராமச்சந்திரன் கோவிலில் பூஜைக்கு கொடுத்து வருபவர்களுக்கு சாப்பாடு பரிமாறுகிறார்.

இதில் பிரச்சனையை ஏற்படுத்தும் விதமாக விஜி, ரவுடி ஆட்களை வரவைத்து வம்பு பண்ண வைக்கிறார். அப்பொழுது அங்கு வந்த ரவுடிகள் ராகவனிடம் பிரச்சினை பண்ணி அன்னதான சாப்பாடு தட்டி விடுகிறார்கள். இதை பார்த்த கண்மணி அந்த ரவுடி கன்னத்தில் அடித்து விட்டு யார் சொல்லி இப்படி பண்ணுகிறாய் என்று விஜியை அடக்கும் விதமாக விஜி போட்ட திட்டத்தை முறியடித்து விடுகிறார்.

ஆனால் இவ்வளவு பிரச்சனை நடந்தும் காரணம் விஜி தான் என்றும் மாறன் வீராவுக்கு தெரியும். தெரிந்தும் பதிலடி கொடுக்காமல் வேடிக்கை பார்க்கிறார்கள். விஜி பற்றி தெரிந்த சில ஆடியோக்கள் வைத்து அதை ஆதாரமாக காட்டி விஜி, குடும்பத்திற்குள் வந்து பிரச்சனை தான் பண்ணப்போகிறார் என்ற விஷயத்தை எல்லோரிடமாவது சொல்லி இருக்கணும்.

இல்லையென்றால் விஜி பற்றிய ரகசியங்களை கண்டுபிடித்து இருக்கணும். எதுவும் இல்லாமல் அமைதியாக இருப்பது விஜியின் ஆட்டத்தை அதிகரிக்க செய்கிறது. ஆனால் எல்லாத்துக்கும் பதிலடி கொடுக்கும் விதமாக கண்மணி தற்போது மாஸ் காட்டி வருகிறார்.