பார்ட்டிகளில் சர்வ சாதாரணமா சப்ளை ஆகுது.. நடிகரால் பதட்டத்தில் பிரபலங்கள்

Gossip: திரையுலகில் பார்ட்டி சம்பவங்கள் எல்லாம் சர்வ சாதாரணமாக நடக்கக்கூடியது. எந்த காரணமும் இல்லாமலேயே 6 மணி ஆனால் நைட் பார்ட்டியை ஆரம்பித்து விடுவார்கள்.

அதிலும் வார இறுதியில் ஈசிஆர் பயங்கர பிசியாக இருக்கும் சின்னத்திரை பெரிய திரை என அத்தனை பிரபலங்களும் பார்ட்டி மூடில் தான் இருப்பார்கள். இந்த ஆறு மணி அவதாரத்தில் பல விஷயங்கள் நடக்கும்.

முக்கிய படங்கள் பேசப்படுவதில் தொடங்கி நடிகைகள் வாய்ப்பு கேட்டு அட்ஜஸ்ட்மென்ட் செய்வது வரை பல சமாச்சாரங்கள் உண்டு. இது அவ்வப்போது கிசுகிசுவாக வந்து கொண்டிருக்கிறது.

நடிகரால் பதட்டத்தில் பிரபலங்கள்

ஆனால் இது போன்ற பார்ட்டிகளில் தடை செய்யப்பட்ட பொருள் சர்வ சாதாரணமாக புழங்குவது அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறது. ஏற்கனவே அந்த பாடகி இது குறித்து வெளிப்படையாகவே ஸ்டேட்மென்ட் கொடுத்தார்.

அதிலும் அந்த பெரிய நடிகர் நடத்தும் பாட்டிகளில் இது தாராளமாக கிடைக்கும் என்று சொன்னார். தற்போது இந்த விவகாரத்தில் பிளவர் நடிகர் சிக்கி இருக்கிறார்.

அவர் மட்டுமல்லாமல் மற்றொரு பக்தியான நடிகருக்கும் இதில் தொடர்பு இருப்பதாக கூறுகின்றனர். அந்த விசாரணை தற்போது நடந்து வருகிறது. இதனால் திரையுலகில் சில பிரபலங்கள் பதட்டத்தில் இருக்கிறார்களாம்.

விசாரணையும் தீவிரமாகி வருவதால் அடுத்தடுத்து திடுக்கிடும் தகவல்கள் வெளி வரலாம் வருகின்றனர். இந்த விவகாரம் தற்போது கோடம்பாக்க வட்டாரத்தை அதிர வைத்துள்ளது.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →