டூரிஸ்ட் பேமிலி மாதிரி 2025-இல் தாக்கத்தை ஏற்படுத்திய 8 படங்கள்.. பார்க்க மிஸ்பண்ணிடாதீங்க!

ஒவ்வொரு ஆண்டும் சினிமாவில் ஏதாவது ஒரு படம் நல்ல ஹிட் கொடுத்து டாப் லிஸ்டில் மக்கள் மனதில் இடம் பிடித்து வருகிறது. அந்த வகையில் எந்தெந்த படங்கள் இந்த ஆண்டு(2025) இந்தியளவில் ஹிட் கொடுத்துள்ளது என்பதை பற்றி இப்பகுதியில் பார்ப்போம்.

பொன்மான்

கொள்ளத்தில் செருப்பு பழக்கமான குடும்பத்தில் அமையாத மணவாளிக்கு 25 சொவர்களின் பொன்விலை குத்தியில் வாங்கி தர மறுப்பதனால் சிக்கியில் சிக்கிய குடும்பம். பட்டப்பகல் தொழில் காம்பவுண்டராக மாறும் பொன்மான். Basil Joseph ஒரு கொடுமையான நட்சத்திர தாத்தாவாகவும், கிராமப் வாழ்க்கையின் தாக்கத்தை பயங்கரமாக வெளிப்படுத்துகிறார்.

ரொந்த்

ஒரு இரவு நேரத்தில் சின்ன குடியிருப்பில் கண்டிப்பான இன்ஸ்பெக்டர் மற்றும் புதிய இன்ஸ்பெக்டர் இருவரும் தங்கள் தனிப்பட்ட பிரச்சினைகளை சமாளிக்க முயற்சிக்கும் கதை.

சூப்பர் பாய்ஸ் ஆஃப் மாலேகா:

1997 காலங்களில் அடர்ஷ் குராவ் நசீர் மற்றும் அவர்களது நண்பர்கள் இணைந்து ஒரு திரைப்படத்தை தயாரிக்க முயற்சி செய்கின்றனர். இதற்கிடையில் இவர்களது நட்பு எவ்வளவு ஆழமாக இருக்கிறது என்பதுதான் இப்படத்தின் மைய கருத்தாக அமைகிறது.

தி மெஹ்தா பாய்ஸ்

அமெரிக்கா செல்வதற்கு தந்தையும், மகனும் திட்டமிடுகிறார்கள். விமான தடை ஏற்பட்ட இருவரும் 48 மணி நேரம் ஒரு இடத்தில் தங்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இந்த படத்தின் கதை உறவுகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

டூரிஸ்ட் பேமிலி

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக குடும்பமே சென்னை வருகின்றது. தாய் தந்தை இரண்டு மகன்கள் என நகைச்சுவையாக கதை நகருகிறது.இந்த படம் தமிழ்நாட்டு மக்களிடம் நல்ல ஒரு வரவேற்ப்பை பெற்றது.

ஸ்டோலன்

படத்தின் முதலில் இரண்டு உடன்பிறப்புகளை காண்பிக்கிறார்கள். இருவரில் ஒரு குழந்தை கடத்தப்படுகிறது. எப்படி கடத்தல் கும்பலை கண்டுபிடிக்கிறார்கள் என்பதே படத்தின் மையக் கருத்தாகும்.

கோர்ட்

19 வயது இளைஞர் சந்து மற்றும் 17 வயது பள்ளி மாணவி ஜபில்லி காதலில் விழுகிறார்கள். ஆனால் ஜபில்லியின் குடும்பம், குறிப்பாக அவரது சித்தப்பா மங்காபதி, இந்த உறவை விரோதமாகக் காண்கிறார். தன்மானம் காக்கும் முயற்சியில் சந்துவை நேரடியாக POCSO சட்டத்தின் கீழ் குற்றவாளியாக்க முயற்சிக்கிறார்கள்.

மித்யா

11 வயது சிறுவன் பெற்றோர்களின் எழுப்பினால் எப்படி மனம் பாதிக்கப்படுகிறான் என்பதை கொண்டு படத்தின் மொத்த கதையும் அமைந்திருக்கிறது. இழப்பை சந்தித்து ஒரு சிறுவன் எப்படி தனது வாழ்க்கையில் போராடுகிறான் என்பதை இந்தப் படத்தை தெளிவாக காட்டியிருப்பார்கள்.