கைதுக்கு பின் உடைந்துபோன ஶ்ரீகாந்த்.. மனதை உருக்கும் காரணம்

நடிகர் ஸ்ரீகாந்த் கோலிவுட்டில் அதிர்ச்சி உண்டாக்கிய விதமாக, போ**தை பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில் ஸ்ரீகாந்த் நான் ஒரு பெரிய தவறு செய்துவிட்டேன். என் மகனுக்கு நான் மட்டுமே ஆதரவு அவனை கவனிக்க வேண்டியது என் கடமை. தற்போது குடும்பத்தில் பல சிக்கல்கள் இருக்கின்றன. தயவுசெய்து எனக்கு ஜாமீன் அளிக்க வேண்டும் என ஜாமீன் கோரினார், ஆனால் நீதிமன்றம் ஜாமீனை மறுத்துவிட்டது.

ஸ்ரீகாந்த், மகன் ஆஹிலிடம் அளவுகடந்த பாசம் வைத்திருந்தார். சினிமாவில் இன்ட்ரெஸ்ட் இல்லாத ஆஹில், விளையாட்டில் திறமை காட்டி பல பரிசுகளை வென்றிருந்தார். அதனால் ஸ்ரீகாந்த் தன் மகனுக்கு விருப்பத்திற்கு முழு சப்போர்ட் செய்துள்ளார்.

இந்நிலையில் சீமான் அவர்களும் தனிப்பட்ட முறையில எனக்கு தம்பி ஸ்ரீகாந்த தெரியும். என்னோட கருத்து அவர் பாவம். திரையுலகுல எனக்கு தெரிஞ்சவரை நிறைய பேர் இதை பயன்படுத்துறாங்க.

அனால் பாவம் இவர் மாட்டிகிட்டாரு என்று நடிகர் ஸ்ரீகாந்த் போ**தை பொருள் பயன்படுத்தி கைதாகி இருப்பது குறித்து நாம் தமிழர்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வருத்தம் தெரிவித்துள்ளார்.

அதிகாரங்களுக்கு தெரியாம இந்த போ**தை பொருள் வராது இது இங்க நீண்ட நாளா இருக்குது. திரையுலகில் மட்டும் இல்ல கல்லூரி பள்ளிகள் கல்லூரிகளுக்கே போயிருச்சு என்றும் அவர் கைதானதுனால ஒழிஞ்சிட போகுதா இல்ல ஒழிக்கணும்னு அதிகாரம் நினைக்கணும் ஆட்சியாளர்கள் நினைக்கணும் நினைச்சா ஒழிக்கலாம் அது அவங்க செய்யமாட்டாங்கனும் என்று கூறியுள்ளார்.