கடந்த இரண்டு நாட்களாக போதை பொருள் வழக்கில் சிக்கிக்கொண்ட நடிகர் ஸ்ரீகாந்த் பற்றிய தேடலும், பேச்சுக்களும் தான் அடிபட்டுக் கொண்டிருக்கிறது, மிகவும் ஆச்சாரமான குடும்பத்தில் இருந்து வந்தவர் ஸ்ரீகாந்த். அப்பா பேங்க் மேனேஜர், திருப்பதியில் இருந்து சென்னை வந்த குடும்பம்.
ரோஜா கூட்டம், மனசெல்லாம், ஏப்ரல் மாதத்தில், என பல ஹிட் படங்களை கொடுத்தவர் ஸ்ரீகாந்த். ரோஜா கூட்டம் படத்திற்கு பின்னர் ஏழு வருடம் எங்களுக்கு தான் படம் பண்ண வேண்டும் என இவரை பின்தொடர்ந்த தயாரிப்பாளர்களும் இருக்கிறார்கள். அந்த அளவிற்கு முதல் படத்திலேயே சாக்லேட் பாய் அந்தஸ்துக்கு உயர்ந்தார்.
இப்பொழுது தடை செய்யப்பட்ட உயர்ரக போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் சிக்கிக்கொண்டார். இப்போது இவரிடம் நடத்தப்படும் விசாரணையில், இவர் மட்டும் எடுத்துக் கொண்டாரா அல்லது மற்றவர்களுக்கு வாங்கி கொடுத்தாரா என்பதுதான். ஆனால் அதற்கு ஸ்ரீகாந்த் பல உண்மைகளை கூறியுள்ளார்.
ஸ்ரீகாந்த் நடித்து ரிலீஸ் ஆகாத தீங்கீறை என்ற படத்தை தயாரித்தவர் பிரசாத். அவர்தான் போதை என்ற தப்பான பழக்கத்துக்கு ஸ்ரீகாந்தை அடிமை ஆக்கியுள்ளார். இவர் அவருக்கு கொடுக்க வேண்டிய பணத்திற்கு பதிலாக போதை மருந்து கொடுத்து அவரைக் கெடுத்துள்ளார்.
இப்பொழுது ஸ்ரீகாந்த் காவல்துறையிடம் உண்மையை ஒப்புக்கொண்டார் மேலும் தனக்கு குடும்ப பிரச்சனை இருக்கிறது எனக்கு Bail வேண்டும் எனவும் கேட்டு வருகிறார். ஆனால் அதற்கு கோர்ட் மறுப்பு தெரிவித்து வருகிறது. பந்தா பகட்டு இல்லாத நடிகர் ஸ்ரீகாந்த், செல்வாக்கும் அந்த அளவிற்கு சினிமாவின் சம்பாதிக்கவில்லை. இதனாலேயே இவருக்கு எந்தவித உதவியும் இன்னும் கிடைக்கவில்லை.