அஜித் மொட்டை அடித்துக் கொண்டு ஹாலிவுட் ஹீரோ போல் சுற்றி வருகிறார். இது படத்திற்காக போட்ட கெட்டப் இல்லை. ஏனென்றால் அவர் அடுத்த படம் நவம்பர் மாதத்தில் தான் சூட்டிங் நடைபெற உள்ளது. குட் பேட் அக்லி இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தான் அஜித்தின் அடுத்த படத்தையும் இயக்க உள்ளார்.
இந்நிலையில் தனுஷ் அஜித்துக்கு ஒரு ஒன் லைன் ஸ்டோரி சொல்லி அவருக்கு பிடித்து போகவே ஃபுல் கிரிப்டையும் ரெடி பன்னியுள்ளார். ஏற்கனவே அஜித்திடமிருந்து அழைப்பு வரும் பொழுது தனுஷ் குபேரா படத்தில் பிசியாக இருந்தார்.
இப்பொழுது தனுஷ் 15 நாள் ரெஸ்ட்டில் தான் இருக்கிறார். அதன் பின் ஜூலை 10ஆம் தேதி இட்லி கடை ரீ ரெகார்டிங் வேலையில் இறங்க உள்ளார். இந்த நேரத்தில் அஜித்தை சந்தித்து விடலாம் என தூது அனுப்பியுள்ளார், ஆனால் அஜித் பிஸியாக இருப்பதால் இப்பொழுதும் இவர்களது மீட்டிங் கேன்சல் ஆகி உள்ளது,
கூடிய விரைவில் இந்த ப்ராஜெக்ட் டேக் ஆன் ஆகும் என்று தெரிகிறது. ஏனென்றால் இந்த படத்தை டான் பிக்சர்ஸ் தயாரிப்பதாக இருந்தது ஆனால் இப்பொழுது அவர்கள் நிலைமை சரியில்லை. இதனால் அஜித் போக்கிலேயே விட்டுவிட்டார் தனுஷ். தயாரிப்பாளரை அஜித் பார்த்துக் கொள்ளட்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டார்.
அஜித்தை பொருத்தவரை 200 கோடி சம்பளம் யார் கொடுத்தாலும் அவருக்கு ஓகே தான். அந்த லிஸ்டில் முதலாவதாக இருப்பது மைத்திரி மூவி மேக்கர். அவர்கள் இல்லை என்றால் சன் பிக்சர்ஸ், இந்த இருவருக்கும் அஜித் படத்தை தயாரிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.