Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், பசுபதி வெண்ணிலாவை மொட்டை மாடியில் இருந்து தள்ளிவிட்டு மொத்த பழியையும் விஜய் மீது போட்டிருக்கிறார். போதாதருக்கு குமரனின் கடையே அடித்து நொறுக்கி இருக்கிறார். இதனால் குமரன் மற்றும் விஜய், பசுபதி மீது தீராத கோபத்தில் இருக்கிறார்கள். அந்த வகையில் காவிரியை ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு வரும்போது விஜய்யை போலீஸிடம் பசுபதி மாட்டி விட்டார்.
ஆனால் விஜய் போலீஸிடம் இருந்து தலைமறைவாகி பசுபதிக்கு டிமிக்கி கொடுத்து விட்டார். இருந்தாலும் பசுபதியை கண்டுபிடித்து உண்மையை போலீசுக்கு நிரூபிக்க வேண்டும் என்று விஜய் கோபமாக இருந்த நிலையில் குமரனுக்கு பசுபதி வந்த விஷயத்தை காவிரி சொல்லி விடுகிறார். உடனே குமரன் கோபத்தில் பசுபதியை தேடி பார்க்க ஆரம்பித்து விட்டார்.
அந்த வகையில் குமரன் கண்ணில் பசுபதி சிக்கியதில் அடிக்க ஆரம்பித்து விட்டார். குமரனிடமிருந்து தப்பிக்க பார்த்த பசுபதியை விஜயும் மடக்கி பிடித்து விட்டார். இரண்டு பேரிடம் சிக்கிய பசுபதி அங்கிருந்து தப்பிக்க போகும்போது நவீனம் வந்து விடுகிறார். உடனே 3 பேரும் சேர்ந்து பசுபதியை எப்படியாவது பிடித்து உண்மையை வாங்க வேண்டும் என்று முயற்சி எடுக்கும் பொழுது பசுபதி அவர்களிடம் இருந்து தப்பிக்க ஆரம்பித்து விட்டார்.
ஆனாலும் பசுபதியே ஓட ஓட விரட்டி பிடிக்கும் விதமாக மூன்று சகலைகளும் முயற்சி எடுத்தார்கள். கடைசியில் இவர்கள் கண்ணில் மண்ணைத் தூவும் விதமாக பசுபதி எஸ்கேப் ஆகிவிட்டார். அடுத்ததாக காவிரிக்கு சரியாகிவிட்டது என்பதால் சாரதா, வீட்டிற்கு வா என்று கூப்பிடுகிறார். ஆனால் காவேரி இன்னும் நன்றாக சரியான பிறகு தான் வீட்டிற்கு வருவேன். அதுதான் கங்கா அக்காவிற்கும் சரியாக இருக்கும் என்று சொல்லிவிடுகிறார்.
பிறகு சாரதா கூப்பிட்ட விஷயத்தை விஜய் இடம் காவேரி சொல்லுகிறார். ஆனால் காவேரி போகாமல் இருக்கும் பட்சத்தில் விஜய் சந்தோஷப்பட்டு கொள்கிறார். அப்பொழுது விஜய் கையில் அம்மம் போட்டு இருப்பதை காவேரி பார்த்து அதிர்ச்சி ஆகிறார். இதனால் மறுபடியும் விஜய் கூடவே இருந்து பார்க்கும் படியாக காவிரி அக்கறை காட்டி வருவார்.