அஜித் போட்ட ரூல்ஸ்.. குழப்பத்தில் தலையை பிச்சுக்கும் தயாரிப்பாளர்கள்

Ajithkumar : தமிழ் திரையுலகில் அஜித் குமார் என்றாலே திரையுலகில் உள்ள அனைவருக்கும் ஒரு பெரிய மரியாதை உண்டு. இவரும் சிறு குழந்தை முதல் வயதான அனைவருக்கும் மரியாதை கொடுக்க தெரிந்த ஒரு நபர். இவர் தனது கடின உழைப்பால் தனக்கென ஒரு அங்கீகாரத்தை தமிழ் திரை உலகில் பெற்றுள்ளார். இவருக்கென நடிப்பு திறமையால் மட்டும் அல்லாமல் இவரை இன்ஸ்பிரேஷனாக எடுத்துக் கொண்ட ரசிகர்கள் ஏராளம்.

அஜித் குமார் அவர்களுக்கு நடிப்பு என்பது ஒரு தொழில். அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை நன்றாக தெரிந்த ஒரு மனிதர். நடிப்பு மட்டுமல்லாமல் தனது சொந்த வாழ்விலும் குடும்பம், குழந்தை என அனைத்தையும் கவனித்துக் கொள்ளும் நல்ல குடும்பத் தலைவனாகவும் இருக்கிறார். நடிப்பு, குடும்பம் மட்டுமல்லாமல் தனது விருப்பப்பட்ட ரேசிங்கிலும் இவர் கலக்கிக் கொண்டிருக்கிறார் என்றே கூறலாம்.

சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பது நடிகர் அஜித்குமார் அவர்களுக்கே பொருந்தக்கூடிய ஒன்று. தற்போது வெளிவந்த “குட் பேட் அக்லி” படம் மிகப்பெரிய வெற்றியடைந்ததை அடுத்து அடுத்த படப்பிடிப்பு நவம்பர் மாதம் தொடங்கவுள்ளது. அது மட்டுமல்லாமல் கார் ரேசிங்கிலும் ஒரு பக்கம் மிகவும் பிஸியாக இருந்து வருகிறார்.

அஜித் குமார் அவர்களின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அஜித்குமார் அவர்கள் முக்கியமான ஒரு கண்டிஷன்களை முன் வைத்திருக்கிறார், இதை நான் தயாரிப்பாளர்களுடன் நேரடியாக பேசிய தெரிந்து கொண்டேன் என வலைப்பேச்சு பிஸ்மி அவர்கள் தற்போது அளித்த நேர்காணலில் கூறியுள்ளார்.

அஜித் போட்ட ரூல்ஸ்..

அதாவது அஜித்குமார் அவர்கள் நவம்பர் மாதத்தில் இருந்து பிப்ரவரி மாதம் வரையில் படப்பிடிப்பிற்கு தேதி கொடுத்திருப்பதாகவும், அதற்கு அடுத்து மார்ச்சிலிருந்து ரேசிங் தொடங்க உள்ளதால் அதற்கு நான் சென்று விடுவேன். அதற்குப் பிறகு என்னை யாரும் கட்டாயப்படுத்தாதீர்கள் என்றும். ஆகையால் நவம்பர்-பிப்ரவரி இந்த மாத இடைவெளிக்குள் படத்தை எடுத்து முடிக்குமாறு கூறியுள்ளதாகவும் அஜித் கூறியியிருப்பதாக நேரடி தகவல் கிடைத்துள்ளதாக வலைப்பேச்சு பிஸ்மி அவர்கள் கூறியுள்ளார்.

அஜித்குமாரின் அடுத்த படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளதாகவும், தகவல் வந்து ரசிகர்களை மிதக்க வைத்துள்ளது. காரணம் “குட் பேட் அக்லி“-ல் ஆதிக் ரவிச்சந்திரன் அஜித் “FANBOY” யாக செய்த சம்பவம்தான். இந்த படம் ஐசரி கணேஷ் தயாரிப்பில் உருவாக உள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது. இதைப்பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் வெளியிடப்படும்.