Vijay : நடிகர் விஜய் அவர்கள் “தமிழக வெற்றி கழகம்” என்னும் கட்சியை ஆரம்பித்து மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். மக்களிடத்திலிருந்து பெரிய வரவேற்பையும் பெற்றார். விஜய் அவர்கள் அரசியலுக்கு வரப்போவதை அடுத்து தனது கடைசி படமான “ஜனநாயகன்” படம் நடித்துக் கொண்டிருந்தார். தற்போது ஜனநாயகன் படம் இவரது கடைசி படம் அல்ல என்கிற செய்தி பரவலாக பேசப்பட்டது.
அதாவது நடிகர் விஜய் அவர்கள் 2026 தேர்தல் முடிவுக்கு பின்னர் இதுதான் என் கடைசி படமா என முடிவெடுக்க போகிறேன் என்பது போல கூறியதாக செய்திகள் வலம் வந்தன. தற்போது அதைப்பற்றி வலைப்பேச்சு பிஸ்மி அவர்கள் அளித்திருந்த ஒரு நேர்காணலில் நடிகர் விஜய் அவர்களின் அரசியல் பயணத்தை பற்றி மனம் திறந்து பேசி உள்ளார்.
நடிகர் விஜய் அவர்கள் ஜனநாயகன் தனது கடைசி படம் என அறிவித்திருந்தார்.அவர் அறிவித்ததன் காரணம் மக்களுக்காக சினிமாவை விட்டு வந்து விட்டார் எனவே மக்கள் நடிகர் விஜய் அவர்களுக்கு ஓட்டு போடுவார்கள், ஓட்டு போட்டு முதலமைச்சர் நாற்காலியில் உட்கார வைப்பார்கள் என்பதுபோல விஜய் அவர்கள் நினைக்கிறார். இது நடக்கவில்லை என்றால் நடிகர் விஜய் அவர்களுக்கு உள்ள ஒரே வழி மீண்டும் சினிமாவிற்கு நடிக்க வருவது மட்டும்தான்.
அதேபோல் இந்த கட்டத்தில் நடிகர் விஜய் அந்த முடிவை எடுக்கவில்லை அவரை பொறுத்தவரையில் ஜனநாயகன் தான் கடைசி படம். 2026 தேர்தல் முடிவுகள் அவரை எந்த மாதிரியான முடிவுகளை எடுக்க வைக்கும் என்பது தேர்தல் முடிவுகளை பொறுத்தே. நடிகர் விஜய் மீண்டும் நடிக்க வருவது அவருடைய ரசிகர்களுக்கு பெரு மகிழ்ச்சி.
இன்றைக்கு பல்வேறு கருத்துக்கணிப்பில் விஜய்க்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது அவருடைய வாக்கு கணக்கெடுப்புஇரட்டை இலக்கத்தில் இருக்கிறது என்றஎல்லாம் பேசிக்கிறாரார்கள். ஒருவேளை கணிப்புகளை தாண்டி அவர் வெற்றி பெற்று விட்டால் எதிரிகள் என்ன செய்யப் போகிறார்கள் என்பது தெரியவில்லை.
விஜய்க்கு 2026 வாய்ப்பே இல்ல.. 2031 வேணும்னா நடக்கலாம்
மேலும் என்னுடைய தனிப்பட்ட கருத்து என்னவென்றால் 2026 தேர்தலில் விஜய் அவர்கள் நினைத்த வெற்றி அவருக்கு கிடைப்பதற்கு வாய்ப்பு இல்லை என்றும், 2031 தேர்தலில் வேண்டுமானால் அதற்கான வாய்ப்புகள் உள்ளன என்றும் வலைப்பேச்சு பிஸ்மி அவர்கள் அவரது நேர்காணலில் தெரிவித்துள்ளார். இது எல்லா நடிகர்களுக்கும் உள்ள ஒரு பொதுவான மனநிலை, நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் கட்சி ஆரம்பிக்கும் போதும் 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்று மெஜாரிட்டி ஆட்சியைப் பிடிப்போம் என கூறினார்.
கமல்ஹாசன் அவர்களும் அதேபோலத்தான் பொதுவாக நடிகர்கள் திரையில் நம்மை பார்த்து கொண்டாடிய ரசிகர்கள் அரசியலுக்கு வந்தால் நமக்கு ஓட்டு போடுவார்கள் என நினைத்து விடுகின்றனர். ஆனால் அரசியல் கள எதார்த்தம் என்பது வேறு, எனவே விஜய் அவர்களுக்கும் அந்த நம்பிக்கை இருக்கும் என நினைக்கிறேன். முடிவு என்பது மக்கள் கையில் உள்ளது என்று வலைப்பேச்சு பிஸ்மி அவர்கள் கூறியுள்ளார். இது மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.