ரவி மோகன் சிக்கலில்.. பெயர் கெடும் நிலைக்கு தள்ளிய திரைப்பட ஒப்பந்த சர்ச்சை

Ravi Mohan: தமிழ் சினிமாவில் தனக்கென ரசிகர்கள் வட்டத்தை உருவாக்கியவர் நடிகர் ரவி மோகன். நாயகனாகவும், இயக்குநராகவும் வளர்ந்து வரும் நிலையில், தற்போது அவரைச் சுற்றி பரபரப்பான வழக்கு ஒன்று சூடுபிடித்துள்ளது. இது அவர் பெயருக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்துமா என்ற கேள்வியை எழுப்புகிறது.

பாபி டச் கோல்டு யுனிவர்சல்’ நிறுவனம், இரண்டு படங்களில் நடிக்க ரவி மோகனுடன் ஒப்பந்தம் செய்ததாக தெரிவித்துள்ளது. முதல் படத்திற்கு 15 கோடி ரூபாய் பேசப்பட்ட நிலையில், அதில் 6 கோடி முன்பணம் வழங்கப்பட்டது. ஆனால் அந்தப் படத்தில் நடிக்காமல், வேறு நிறுவன படங்களில் நடித்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நிறுவனத்தின் தரப்பில், அவரிடம் பணத்தை திருப்பி கேட்ட போதும் ரவி மோகன் அதை வழங்கவில்லை என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், அவர் சொந்தமாக ‘ப்ரோ கோட்’ என்ற படத்தை தயாரிக்க உள்ளார் என்பதும் மனுவில் அதிர்ச்சியாக கூறப்பட்டுள்ளது. அதனால் புதிய படத்துக்கு தடையும் கோரப்பட்டுள்ளது.

முன்னதாக பெற்ற 6 கோடியை நீதிமன்றத்தில் உத்தரவாதமாக தாக்கல் செய்யவேண்டும் என்றும், வேறு நிறுவனங்களின் படங்களில் நடிக்க தடை விதிக்கவேண்டும் என்றும் கோரிக்கை செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் இது தொடர்பாக வாதம் நிகழ்த்தியுள்ளார். நீதிமன்றம் ஜூலை 23ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தது.

ரவி மோகன் தரப்பில், “நாங்கள் கால்ஷீட் கொடுத்தும் அவர்கள் படம் துவங்கவில்லை; எனவே நஷ்டஈடு தேவை” என்ற வாதம் முன்வைக்கப்பட்டது. அவருக்கு ஏற்பட்ட இழப்புக்காக கூடுதல் 10 கோடி ரூபாய் வழங்கவேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. இரு தரப்பும் தங்களது நிலைப்பாட்டில் உறுதியாகத் திரண்டுள்ளன.

இந்த விவகாரம், ரவி மோகனின் இருக்கிற பெயரையே கெடுக்கப்போகும் மாதிரி தான் தெரிகிறது.சினிமா என்பது ஒளி-நிழல்களின் உலகம். இன்று ஒரு நட்சத்திரம் உயரத்தில் இருந்தாலும், ஒப்பந்த மற்றும் பண விவகாரங்களில் சிக்கிக்கொண்டால் பெயருக்கு களங்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த விவகாரம், ரவி மோகனின் மதிப்புக்கு பாதிப்பா, நேர்மைக்கு ஆதாரமா என்பதை நேரமே தீர்மானிக்கும்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →