சமந்தா தனது தமிழ் திரையுலக பயணத்தை விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக் யே மாயா சேசவேயின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அவர் நடித்த நீதானே என் பொன்வசந்தம், அஞ்சான், தெறி, 24, மெர்சல், சீமராஜா போன்ற பல படங்கள் வெற்றிகரமான வரவேற்பைப் பெற்றன.
இவரது நடிப்பில் வெளிவந்த முக்கியமான ஹிட் படம் தெறி. விஜய் சமந்தா ஜோடி ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது. அதன்பின்னர் 24 திரைப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்ததும், சைஃபை ஜானருக்கே ஒரு புதிய உயிர் ஊட்டியது.
மீள முடியாத சோகத்தில் சமந்தா
பவன் கல்யாண், மகேஷ் பாபு, ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் நடித்து திறமையை நிரூபித்தார். தயாரிப்பாளர் பெல்லங்கொண்டா சுரேஷின் மகன் சாய் சீனிவாஸின் அறிமுக படத்திலும் ஜோடியாக நடித்தார். இளம் ஹீரோக்களுடனும் தயக்கமின்றி நடித்து ஆதரவளித்தார்.
ஒரு காலத்தில் தெலுங்கு பிக்பாஸ் சீசனில் தொகுப்பாளராக கவனம் பெற்ற சமந்தா, கலர்ஸ் மற்றும் காமெடியை நயமுடன் கலந்து நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி சில நொடிகளில் ரசிகர்களின் கவனத்தை பெற்றார்.
இந்நிலையில் சமந்தா 2013 ல் மணிரத்னம் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த கடல் படத்திலும், 2015 ல் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளிவந்த ஐ படத்திலும் தான் ஹீரோயின் ஆக நடிக்க இருந்ததாக கூறினார்.
மேலும் தனக்கு உடல்நிலை சரியில்லாததால் அந்த இரு படங்களிலும் தன்னால் நடிக்க முடியவில்லை என்றும் கூறியுள்ளார். மணிரத்னம், ஷங்கர் போன்ற பெரிய இயக்குனர்களுடன் பணிபுரியாமல் போனது தனக்கு வருத்தமளிக்கிறது என்று சமந்தா தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.