ஆதி வல்லினம் யாகாவாராயினும் நா காக்க போன்ற படங்கள் மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றார். ஆனால் அவருக்கு ஹீரோவாக பெரிய அளவிற்கு வரவேற்பு கிடைக்காததால் அதன்பிறகு சின்னச்சின்ன கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க ஆரம்பித்தார். இவரது நடிப்பில் வெளியான மரகத நாணயம் திரைப்படம் இவருக்கு ஒரு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. அதன்பிறகு தெலுங்கு படங்களில் வில்லனாக நடித்து தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வந்தார்.
![aadhi nikki galrani](https://www.cinemapettai.com/wp-content/uploads/2022/03/aadhi.jpg)
நிக்கி கல்ராணி டார்லிங் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படமே இவருக்கு ஒரு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது அதன் மூலம் இவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் கிடைத்தன. அதன்பிறகு வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க ஆரம்பித்தார். தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.
![aadhi nikki galrani](https://www.cinemapettai.com/wp-content/uploads/2022/03/nikki-kalrani.jpg)
சமீபத்தில் ஆதி மற்றும் நிக்கி கல்ராணி இருவரும் இணைந்து மரகதநாணயம் படத்தில் நடித்திருந்தனர். அப்போதிலிருந்தே இவர்களுக்குள் காதல் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின.மேலும் இப்படத்தில் கவிதைகளாய் எனும் பாடலில் ஆதி நிக்கி கல்ராணி உருக உருக காதல் செய்வார்கள். தற்போது அந்த காதல் உண்மையாகியுள்ளது என அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர். ஆனால் இவர்கள் வெளிப்படையாக கூறாமல் நாங்கள் இருவரும் நண்பர்கள் என கூறி வந்தனர்.
![aadhi nikki galrani](https://www.cinemapettai.com/wp-content/uploads/2022/03/nikki-kalrania.jpg)
ஆனால் மார்ச் 24. 3. 2022 ஆம் ஆண்டு இவர்கள் இருவரது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தற்போது புகைப்படங்களை ஆதி மற்றும் நிக்கி கல்ராணி இருவரும் அவர்களது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களிடம் இந்த இன்ப செய்தியை அறிவித்துள்ளனர்.