சினிமாவில் திறமை எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு அதிர்ஷ்டமும் மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. அவ்வாறு ஒருவருக்கு சினிமாவில் ஹீரோ வாய்ப்பு கிடைக்க தொடர்ந்து நான்கு ஐந்து படங்களில் கதாநாயகனாக நடித்து வந்தார். அதுவும் பிரபல இயக்குனர்களின் படங்களில் வாய்ப்பு கிடைத்தது.
இப்படி சினிமாவில் ஓஹோ என்று போய்க்கொண்டிருக்கும் நேரத்தில் அவருடைய முதல் மனைவிக்கு குழந்தை இல்லாத காரணத்தினால் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். ஒரே நேரத்தில் இரட்டை சவாரி செய்தால் என்னவாகும் என்பது அப்போது தான் அவருக்கு தெரியவந்துள்ளது.
அதாவது வீட்டில் தினமும் பிரச்சனை ,சண்டை என்பதால் அவரால் சினிமாவில் கவனம் செலுத்த முடியாமல் போய்விட்டது. அந்த குறுகிய காலத்தில் பல ஹீரோக்கள் சினிமாவில் நுழைந்து தொடர்ந்து ஹிட் படங்களை கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.
இதனால் அந்த ஹீரோ சினிமாவில் இருந்த ஓரம் கட்டப்பட்டார். இவ்வாறு ஹீரோவின் மார்க்கெட் சரியா அவரது இரண்டு மனைவிகள் தான் காரணம். மேலும் அதன் பிறகு படங்களில் சைடு கேரக்டரில் அவ்வப்போது தலையைக் காட்டி வருகிறார். மக்கள் தன்னை மறந்து விடக்கூடாது என்பதால் பிரபல நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதிலும் அவமானத்தை சந்தித்தார்.
இவ்வாறு நடிகர் சென்ற இடமெல்லாம் சுத்தி சுத்தி பிரச்சனை ஆக வந்து கொண்டிருக்கிறது. இப்போது வெள்ளித்திலேயே வேண்டாம் என்று சின்னத்திரை பக்கம் வந்துள்ளார். இதை சரியாக பயன்படுத்திக் கொண்டால் சின்னத்திரையிலாவது அந்த நடிகர் ஜொலிக்கா அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.