Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

முருகதாஸுக்கு வாய்ப்பு தர மறுக்கும் அஜித்.. என்ன காரணம் தெரியுமா

முருகதாஸுக்கு வாய்ப்பு தர மறுக்கும் அஜித்.. என்ன காரணம் தெரியுமா

அஜித் பொதுவாக தனக்கு வாய்ப்பு கொடுக்கும் இயக்குனர்கள் தயாரிப்பாளர்களுக்கு ஒரு முறை, இரு முறை, மூன்று முறை கூட வாய்ப்புகளை வாரி வழங்குவார். அப்படி இருக்க தன்னை ஒரு ஆக்ஷன் ஹீரோவாக கொண்டு வந்த ஏ ஆர் முருகதாஸ் […]

அஜித் பொதுவாக தனக்கு வாய்ப்பு கொடுக்கும் இயக்குனர்கள் தயாரிப்பாளர்களுக்கு ஒரு முறை, இரு முறை, மூன்று முறை கூட வாய்ப்புகளை வாரி வழங்குவார். அப்படி இருக்க தன்னை ஒரு ஆக்ஷன் ஹீரோவாக கொண்டு வந்த ஏ ஆர் முருகதாஸ் தீனா படத்தின் மூலம் இணைந்தார்கள். எதற்காக ஏ ஆர் முருகதாஸுக்கு மட்டும் வாய்ப்புகளை மறுபடியும் தர மறுக்கிறார் அஜித்.

பொதுவாக ஏ ஆர் முருகதாஸ் சபை நாகரீகம் இன்றி நாகரிகமற்ற முறையில் பேசக்கூடியவர் இது வளர்ந்து வந்த வேளையில் நடந்துள்ளது. அதேபோல் அவருக்கு மரியாதை கொடுப்பவர்கள் இடம் அவரும் மரியாதையாக நடந்து கொள்வார். மேலும் படப்பிடிப்பு தளங்களில் கொஞ்சம் அதிகமாகவே கோபப்படுவார். அது யாராக இருந்தாலும் தொழிலில் கொஞ்சம் ஈடுபாடு இல்லாமல் இருந்தால் கோபப்பட்டு திட்டி விடுவாராம் இது பலமுறை படப்பிடிப்பு தளங்களில் நடந்துள்ளது.

அப்படியிருக்க மிரட்டல் என்ற படம் அஜித்துக்காக உருவாக்கப்பட்டது. அது பிடிக்காமல் அஜித் விலக கஜினி ஆக உருமாறியது. வெற்றியும் பெற்றது அதற்கு அப்புறம் முருகதாசன் வளர்ச்சி அசுர வளர்ச்சியாக இருந்தது.

ரசிகர்கள் முருகதாசிடம் அஜித்திற்கு எப்போது படம் இயக்குவீர்கள் என்று கேட்கும்பொழுது முருகதாஸ் இப்போது அஜித் அவர்களுக்கு கதை தயாராக இருக்கிறது. அவர் வந்தால் எப்பொழுதும் நானும் தயாராக இருக்கிறேன் என்று கூறுவார். ஆனால் அஜீத் இதுவரை முருகதாசை கண்டுகொள்ளவில்லை அவர் பேசும் முறைகளில் மாற்றம் முக்கியமாக ஒவ்வொரு படத்திற்கும் தயாரிப்பாளர்களும் அவர்கள் தான் வசூல் பற்றி பேசுவார்கள்.

ஆனால் ஏ ஆர் முருகதாஸ் அந்த படத்திற்கான வசூல் பற்றி பேசுவார் .இயக்குனர் வேலையை மட்டும் பார்க்காமல் அனைத்து வேலையும் அது தேவையில்லாத விஷயங்களில் மூக்கை நுழைப்பது போன்ற விஷயங்களில் ஈடுபடுவது இதெல்லாம் படங்கள் பார்த்து பார்த்து அஜித் ஒதுக்கி இருக்கிறார்.

தற்பொழுது கூட எனக்கு சினிமாவே பிடிக்கவில்லை சினிமா விட்டு விலகி போகிறேன் என்று மிகப்பெரிய ஒரு இயக்குனர் கோழைத்தனமாக சொல்வது அனைவரும் ஏமாற்றும் விதமாக அமைந்தது. எதனால் என்றால் அனைத்து நடிகரும் இப்பொழுது வரை ஒதுக்குகிறார்கள். அதனால் தான் இப்படிக் கூறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.