Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

கிழக்குச் சீமையிலே விஜயகுமாரை மிஞ்சிய அல்லு அர்ஜுன்.. மாமன் சீராக இலட்சக்கணக்கில் கொட்டிக் கொடுத்த ஹீரோ

கிழக்குச் சீமையிலே விஜயகுமாரை மிஞ்சிய அல்லு அர்ஜுன்.. மாமன் சீராக இலட்சக்கணக்கில் கொட்டிக் கொடுத்த ஹீரோ

விஜயகுமார் பாணியில் அல்லு அர்ஜுன் குழந்தைக்கு மாமா முறை சீர் செய்துள்ளார்.

Actor Allu Arjun: பிரபல நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் தமிழ் சினிமாவில் பெரிதும் பேசப்பட்டவர் விஜயகுமார். இவர் நடிப்பில் எண்ணற்ற படங்கள் மாபெரும் வெற்றியை கண்டிருக்கிறது. இந்நிலையில் இவரையே மிஞ்சும் அளவிற்கு அக்கட தேச நடிகர் மேற்கொண்ட செயல் குறித்த தகவலை இங்கு காண்போம்.

தன் தந்தையின் சிபாரிசில் நடிக்கும் வாய்ப்பு பெற்று முன்னணி கதாநாயகனாய் வலம் வருபவர் தான் ராம் சரண். மாவீரன், ஆர் ஆர் ஆர் போன்ற படங்களில் தன் நடிப்பினை சிறப்புற வெளிக்காட்டியவர். சிரஞ்சீவியின் மகனான இவர் உபசன்னா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

சுமார் 12 வருடங்கள் கழித்து, இவர்கள் இருவரின் அன்புற்கு அடையாளமாய் தற்பொழுது பெண் குழந்தை பிறந்துள்ளது. குடும்பமே கொண்டாடி வரும் நிலையில் தாத்தாவாகிய சிரஞ்சீவி ஒட்டு மொத்த சந்தோசத்தையும் வெளிப்படுத்தி வருகிறார்.

மேலும் குழந்தைக்கு கிம் கிளாரா என்ற பெயர் சூட்டி உள்ளனர். இந்நிலையில் கிழக்கு சீமையிலே அண்ணன் தங்கை பாசத்தை வெளிப்படுத்தும் விதமாய், தாய் மாமன் சீர் செய்து கொண்டு போகும் விஜயகுமார் பாணியில் அல்லு அர்ஜுன் குழந்தைக்கு மாமா முறை சீர் செய்துள்ளார்.

அல்லு அர்ஜுன், ராம்சரண் குழந்தைக்கு மாமா முறை என்பதால் அக்குழந்தைக்கு தங்கத்தில் ஸ்லேட் ஒன்றை கிப்ட் செய்துள்ளார். மேலும் அந்த ஸ்லேடில் அக்குழந்தை பற்றிய தகவல்கள் எல்லாம் அடங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இது போன்ற சிறப்பான கிஃப்ட்டை சீராக கொடுத்து உள்ளார் அல்லு அர்ஜுன்.

மருமகள் நா சும்மா இல்லை என்பதை உணர்த்தும் விதமாய் இவரின் செயல் இருந்து வருகிறது. மேலும் இவர் கொண்ட பாசம் கிழக்கு சீமையிலே விஜயகுமாரையே மிஞ்சி விடும் அளவிற்கு இருப்பதாக சினிமா வட்டாரங்கள் கூறி வருகிறது.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.