சனிக்கிழமை, அக்டோபர் 26, 2024

உயிருக்கே உலை வைக்கப் பார்த்த குடிகார காதலன்.. இரவோடு இரவாக பொட்டிப் படுக்கையை கட்டி ஓடிய நடிகை

அறிமுகமான படத்திலேயே யாருடா இந்த பொண்ணு என திரும்பி பார்க்க வைத்தவர் தான் அந்த நடிகை. அழகும் திறமையும் இருந்த இந்த ஹீரோயினுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் தாராளமாகவே குவிந்தது.

அதை கெட்டியாக பிடித்துக் கொண்ட நடிகை தொடர்ந்து படங்களில் நடித்து தன்னுடைய திறமையை நிரூபித்தார். ஆனால் இடையில் இவர் எங்கே இருக்கிறார் என தெரியாத அளவுக்கு காணாமல் போனார். இதற்கு முக்கிய காரணம் நடிகைக்கு பார்ட்டி நடிகரின் மேல் இருந்த காதல் தான்.

நீ இல்லாமல் நான் இல்லை, நான் இல்லாமல் நீ இல்லை என்ற அளவுக்கு இந்த ஜோடி ஒரே வீட்டில் தங்கி குடும்பம் நடத்தி வந்தது. ஆனால் திடீரென நடிகை பக்கத்து மாநிலத்திற்கு போய் செட்டிலானார். இது பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் அதற்கான காரணமும் இப்போது கசிந்துள்ளது.

Also read: வாய்ப்புக்காக மட்டுமே அட்ஜெஸ்ட்மென்ட் செஞ்சேன்.. மாத்திரை கொடுத்து கொல்ல பார்த்த நடிகையின் குடும்பம்

அதாவது நடிகருக்கு குடிப்பழக்கம் இருப்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் முழு நேரமும் அவர் தண்ணீரில் தான் மிதப்பாராம். ஒரு நாள் அளவுக்கு அதிகமான குடிபோதையில் அவர் நடிகையை படுக்கைக்கு அழைத்திருக்கிறார். ஆரம்பத்தில் பொறுத்துப்போன நடிகை அதற்கு முடியாது என்று மறுப்பு சொன்னாராம்.

உடனே டென்ஷனான நடிகர் காதலியை கன்னா பின்னாவென்று அடி வெழுத்து விட்டாராம். இதுக்கு மேல இவருட்ட குப்பை கொட்டினா நம்ம உசுருக்கே உத்திரவாதம் கிடையாதுன்னு நடிகை ராவோடு ராவாக மூட்டை முடிச்சை கட்டி விட்டாராம். அன்றிலிருந்து இப்போது வரை நடிகரின் நிழல் கூட படக்கூடாது என அவர் ஒதுங்கியே இருக்கிறார்.

Also read: பிணந்தின்னி கழுகுகளுக்கு இரையான நடிகை.. ஆதரவு கொடுத்து வளைத்து போட்ட அரசியல் பிரபலம்

- Advertisement -spot_img

Trending News