பட வாய்ப்பு இல்லைனாலும் கோடியில் புரளும் நடிகை.. சங்கதி இதுதான்

நடிகைக்கு தொடக்கம் சின்னத்திரை என்றாலும் இப்போது பெரிய தலைகளுடன் தான் பழக்கவழக்கம் இருந்து வருகிறது. அதாவது சின்னத்திரைகளில் சில தொடர்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பரிச்சயமான நடிகை அதன் பிறகு வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைத்தார்.

ஆரம்பத்தில் நடிகைக்கு படங்கள் ஓடினாலும் அதன் பின்பு அவரது மார்க்கெட் டல் அடித்து விட்டது. ஆனாலும் அவ்வப்போது ஒவ்வொரு படத்தில் வாய்ப்பு வந்து கொண்டு தான் இருக்கிறது. அவரது சம்பாத்தியம் மிகக் குறைவாகத்தான் இருக்கக்கூடும். ஆனால் பங்களா, காரு என ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.

இதற்கெல்லாம் அவர் பூர்வீக சொத்தில் வாங்கி இருக்கலாம் என்று பலர் நினைக்கலாம். ஆனால் இதற்கெல்லாம் காரணம் வேறு இருக்கிறதாம். நடிகை இரவு நேரங்களில் பார்ட்டியில் தவறாமல் கலந்து கொண்டு வருகிறாராம். ஏனென்றால் அங்கு பெரிய தொழிலதிபர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் கலந்து கொள்கிறார்களாம்.

இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட நடிகை அவர்களை மயக்கி தன் வலையில் வீழ்த்தி விடுகிறாராம். அவர்களிடம் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பணத்தையும் கரந்து விடுகிறார். மேலும் தனது மேனேஜரிடம் இந்தப் பணத்தை கொடுத்து முக்கிய நகரங்களில் இடம் வாங்கி சொத்து சேர்த்து வருகிறாராம்.

அதுமட்டுமின்றி அவரது மேனேஜரும் புரோக்கர் போல நடிகைக்கு பெரிய தலைகளை சிபாரிசு செய்து வருகிறாராம். சினிமாவில் நடிப்பதை விட இதில் குறுகிய காலத்திலேயே சொத்து சேர்த்து விடலாம் என கேவலமான வேலையை நடிகை செய்து வருகிறார். மேலும் இவ்வாறு தான் அவர் கோடியில் புரளுகிறார் என கோலிவுட் வட்டாரத்தில் நடிகையின் பெயர் நாரி கிடக்கிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →