Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

அஜித்தால் சினிமாவே வேண்டாம் என வெறுத்து ஓடிய நடிகை.. சிம்ரன் அளவுக்கு வர வேண்டியவங்க!

அஜித்தால் சினிமாவே வேண்டாம் என வெறுத்து ஓடிய நடிகை.. சிம்ரன் அளவுக்கு வர வேண்டியவங்க!

அஜித்தை பொருத்தவரைக்கும் தன்னுடைய சக கலைஞர்களுக்கு நிறைய உதவிகளை செய்திருக்கிறார் என்று கேள்விப்பட்டிருக்கிறோம்.

Ajith Kumar: 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரிட் ஆக இருந்த நிறைய நடிகைகள், தற்போது எங்கே இருக்கிறார்கள் என்று தெரியாத அளவிற்கு காணாமல் போய்விட்டார்கள். முகம் என்று கொடி கட்டி பறக்க வேண்டிய சில நடிகைகள் ஒன்று இரண்டு படத்துடன் சினிமாவே வேண்டாம் என ஒதுங்கி விடுகிறார்கள். அப்படி பயங்கர பேமஸ் ஆக இருந்த நடிகை ஒருவர், நடிகர் அஜித்தால் சினிமாவே வேண்டாம் என போய்விட்டதாக சொல்லப்படுகிறது.

அஜித்தை பொருத்தவரைக்கும் தன்னுடைய சக கலைஞர்களுக்கு நிறைய உதவிகளை செய்திருக்கிறார் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் ஒரு நடிகை சினிமாவே வேண்டாம் என்று ஓடும் அளவிற்கு இவர் என்ன செய்தார் என்று எல்லோரையுமே யோசிக்க வைக்கிறது. ஆனால் இது ஒரு காதல் பிரச்சனையால் நடந்த விபரீதம்.

தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் நட்சத்திர தம்பதிகளில் அஜித் மற்றும் ஷாலினி தம்பதி முக்கியமானவர்கள். அமர்க்களம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது இவர்கள் இருவருக்குள்ளும் காதல் ஏற்பட்டு, பின்னர் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு அனுஷ்கா மற்றும் ஆத்விக் என்று இரு குழந்தைகள் இருக்கிறார்கள்.

அஜித், ஷாலினியை காதலிப்பதற்கு முன்பே அவருடன் காதல் கோட்டை மற்றும் தொடரும் போன்ற படங்களில் நடித்த நடிகை ஹீராவைத்தான் காதலித்திருக்கிறார். படப்பிடிப்பு தளங்களில் காதல் கடிதம் கொடுக்கும் அளவிற்கு தீவிரமான காதலாக இது இருந்திருக்கிறது. அஜித்தும் ஹீராவின் அம்மாவிடம் அவரை பெண் கேட்டு இருக்கிறார்.

ஆனால் ஹீரோவின் அம்மா என் மகள் இப்போது தான் சினிமாவில் நன்றாக வளர்ந்து வருகிறாள், இப்போதெல்லாம் திருமணம் செய்து கொடுக்க முடியாது என்று மறுத்துவிட்டாராம். இருந்தாலும் இவர்கள் இருவரும் தங்களுடைய காதலை வளர்த்துக் கொண்டுதான் வந்திருக்கிறார்கள். ஆனால் ஹீராவின் ஓவர் ஆட்டிடியூடால் அஜித்திற்கு நாளடைவில் அவர் மீது வெறுப்பு உண்டாகி விட்டதாம்.

எனவே அந்தக் காதலை பிரேக் அப் செய்த அஜித், அதே வருடத்தில் ஷாலினியை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். இது நடிகை சீதாவை ரொம்பவே பாதித்திருக்கிறது. இதனால் தான் அவர் சினிமாவே வேண்டாம் என ஒதுங்கி விட்டார். சிம்ரன் போல் வரவேண்டிய இந்த நடிகை அஜித்துடன் ஆன காதல் பிரச்சினையால் காணாமல் போய்விட்டார்.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.