புதன்கிழமை, அக்டோபர் 23, 2024

கோபியை தோற்கடித்து கெத்தாக நிற்கும் பாக்கியா.. அப்பா பின்னாடி போய் ஓடி ஒளிஞ்சிகிட்ட செழியன்

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், பாக்கியா எப்படியோ பாதி பணத்தை ரெடி பண்ணி பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுத்துவிட்டார். ஆனால் மீதம் தேவைப்படும் பணத்திற்காக பாக்யாவிற்கு ஏற்கனவே பண உதவி செய்த நபரை சந்தித்து பணம் கேட்டிருந்தார். அவரும் பாக்கியா கேட்டதும் உதவி பண்ணுவதற்கு தயாராகி விட்டார்.

ஆனால் அதற்குள் பாதிக்கப்பட்ட மக்கள் பணத்தைக் கேட்டு பாக்யாவின் ஹோட்டலுக்கு முன் பிரச்சனை பண்ண ஆரம்பித்து விட்டார்கள். பிறகு இதை எப்படி சமாளிப்பது என்று தெரியாத பாக்கியா, அங்கே இருந்து கொண்டு வட்டிக்கு பணம் தருகிறேன் என்று சொன்ன நபருக்கு போன் பண்ணி நடந்த விஷயத்தை சொல்கிறார். உடனே அவர் நீங்கள் கேட்ட பணத்தை நான் இப்பொழுதே கொண்டுட்டு வருகிறேன் என்று ஹோட்டலுக்கு வருகிறார்.

வந்ததும் பாக்யாவை சந்தித்து அஞ்சு லட்ச ரூபா பணத்தை கொடுத்து விடுகிறார். அதை வாங்கிய பாக்கியா, கொடுக்க வேண்டிய பணத்தை எல்லாம் கொடுத்து செட்டில் பண்ணி விடுகிறார். ஓரளவுக்கு இந்த பட பிரச்சினை எல்லாம் முடிந்து விட்டது. பிறகு அங்கு வந்த பழனிச்சாமி, யாரோ மூன்றாவது நபரிடம் பணத்தை வாங்கி இருக்கீங்க.

ஆனால் என்னிடம் வாங்க மறுத்து விட்டீர்களா? நான் அந்த அளவிற்கு உங்களுக்கு வேண்டாதவனா போய் விட்டேனா என்று கேட்கிறார். அதற்கு பாக்கியா நான் நிறைய உதவி உங்களிடம் இருந்து பெற்று இருக்கிறேன். மறுபடியும் உங்களிடம் உதவி கேட்டேன் என்றால் நம்முடைய நட்பு சுமூகமாக இருக்காது. அதனால் தான் நான் உங்களுடைய உதவி வேண்டாம் என்று மறுத்து விட்டேன் என்று சொல்கிறார்.

இதற்கிடையில் செழியன், கோபி சொன்னதை நம்பி கோபியின் ஹோட்டலில் காத்துக்கொண்டிருக்கிறார். ஆனால் கோபி சொன்னபடி செழியினை சந்திப்பதற்கு எந்த ஒரு ஆட்களும் வரவில்லை. கடைசியில் கோபி வந்து செழியினை சமாளித்து வீட்டிற்கு அனுப்பி இருக்கிறார். ஏனென்றால் பாக்கியா பிரச்சினையை சரி செய்து விட்டார் என்று கோபிக்கு தெரிந்து விட்டது.

ஆனால் பாக்யாவிற்கு பணம் கொடுத்து உதவியது பழனிச்சாமி தான் என்று நினைத்து கோபி அவருடைய நண்பரிடம் சொல்கிறார். உடனே கோபியின் நண்பர், அப்படி என்றால் செழியன் பாக்யாவிற்கு போய் உதவ கூடாது என்பதற்காகத்தான் நீ டிராமா பண்ணினியா என்று கேட்கிறார். ஆமா என்று சொல்லிய கோபியிடம் நீ பாக்யாவிற்கு மட்டுமல்ல உன் பையனுக்கும் சேர்ந்து துரோகம் பண்ணி ஏமாற்றுகிறாய் என்பது உனக்கு புரியலையா என கேட்கிறார்.

உடனே கோபி, அதெல்லாம் இல்லை நிச்சயம் என்னுடைய பிசினஸில் என் பையனுக்கு பங்கு இருக்கிறது. அவனுடைய கேரியரை நான் அப்படியே விட்டு விட மாட்டேன் என்று சொல்கிறார். இதெல்லாம் தொடர்ந்து வீட்டுக்கு வந்த பாக்யா, பெருமூச்சு விட்டு நிம்மதியாக இருக்கிறார். ஆனால் ஈஸ்வரி இந்த பிரச்சனைக்கு காரணம் நான் தான் என்று சொல்லி பீல் பண்ணி பேசுகிறார்.

அதற்கு பாக்யா, ஈஸ்வரியை சமாதானப்படுத்தி உங்களுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது ஒரு சாதாரண பிரச்சனை அதை நான் முடித்து விட்டேன். இனி எல்லாமே நல்லதாக நடக்கும் என்று ஆறுதலாக பேசுகிறார். அப்பொழுது வந்த செழியன், பாக்யாவிடம் மன்னிப்பு கேட்கிறார். ஆனால் பாக்யா எதற்கு என்று கேட்கும் பொழுது உங்களுடைய இக்கட்டான சூழ்நிலையில் என்னால் உதவ முடியாமல் போய்விட்டது என்று சொல்கிறார்.

இருந்தாலும் பாக்யாவின் துணிச்சலையும் தன்னம்பிக்கையும் பாராட்டதான் வேண்டும். ஏனென்றால் எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையிலும் குடும்பத்தையும் வாரிசுகளையும் நம்பி இல்லாமல் என்னுடைய பிரச்சினை நானே பார்த்துக் கொள்வேன் என்று உறுதியாக இருந்த பாக்யாவிற்கு தற்போது வெற்றி கிடைத்துவிட்டது. அத்துடன் பழிவாங்க வேண்டும் என்று நினைத்த கோபி மூஞ்சிலும் கரியை பூசி தோற்கடித்து விட்டார்.

- Advertisement -spot_img

Trending News