Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

ரவீந்தர், மகாலட்சுமி காதலை அம்பலப்படுத்திய பயில்வான்.. அடுத்தவ புருஷனுக்கு ஆசைப்பட்ட கேவலம்

ரவீந்தர், மகாலட்சுமி காதலை அம்பலப்படுத்திய பயில்வான்.. அடுத்தவ புருஷனுக்கு ஆசைப்பட்ட கேவலம்

ரவீந்தர், மகாலட்சுமியின் காதல் விவகாரம் பற்றி பேசியுள்ள பயில்வான்.

Bayilvan Ranganathan: வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு இதுதான் பயில்வான் ரங்கநாதன் ஸ்டைல். அடுத்தவரின் அந்தரங்கத்தை பற்றி பொதுவெளியில் பேசி வரும் இவர் தற்போது சின்னத்திரை நடிகையான மகாலட்சுமியை பற்றி விமர்சித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

ஏற்கனவே திருமணம் செய்து ஒரு ஆண் குழந்தைக்கு அம்மாவாக இருக்கும் மகாலட்சுமி கடந்த வருடம் திடீரென தயாரிப்பாளர் ரவீந்தரை திருமணம் செய்து கொண்டார். பணத்தாசையில் தான் அவர் இப்படி ஒரு முடிவு எடுத்ததாக இப்போது வரை பேசப்பட்டு வருகிறது.

அதைப்பற்றி குறிப்பிட்டுள்ள பயில்வான் ஏற்கனவே பல மோசடிகளை செய்திருக்கும் ரவீந்தரை மகாலட்சுமி வளைத்துப் போட்டது நிச்சயம் பணத்திற்காக தான். ஏனென்றால் இந்த கல்யாணத்திற்கு முன்பே அவர் வேறொரு நடிகையின் கணவருடன் தொடர்பில் இருந்தார்.

அது காவல் நிலையம் வரை சென்று பரபரப்பை ஏற்படுத்தியதால் மகாலட்சுமி புளியங்கொம்பாக பிடித்து செட்டில் ஆகிவிட்டார் என பயில்வான் காரசாரமாக விமர்சித்துள்ளார். அந்த வகையில் ரவீந்தர் தயாரித்த படத்தில் நடிக்கும் போது தான் அவர்களுக்குள் காதல் மலர்ந்து இருக்கிறது.

இவ்வளவு பெரிய உருவத்தை யாரும் திருமணம் செய்து கொள்ள முன்வர மாட்டார்கள். அதிலும் மகாலட்சுமி போல் அழகாக இருக்கும் பெண் இதை செய்ய மாட்டார். அப்படி இருக்கும் போது பணத்திற்காக தான் அவர் ரவீந்தரை முந்தானையில் முடிந்து கொண்டார்.

ஆனால் ஒரு வருடம் கூட இவர்களுடைய சந்தோசம் நீடிக்கவில்லை. மகாலட்சுமி வந்த நேரம் ரவீந்தர் இப்போது புழல் ஜெயிலில் அடைப்பட்டு கிடக்கிறார் என்று முகம் சுளிக்கும் வகையில் பயில்வான் பேசியிருக்கிறார். இவ்வாறாக அவர் மகாலட்சுமியின் தனிப்பட்ட வாழ்க்கையை புட்டு புட்டு வைத்து பரபரப்பை கிளப்பி இருக்கிறார்.

V

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.