bb7=promo

பிக் பாஸ் வீட்டின் அடுத்த கேப்டன் இவர்தான்.. தலைகீழாக மாறப் போகும் ஸ்மால் பாஸ் வீடு

Bigg Boss Tamil Season 7 | 3rd November 2023 – Promo 2: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் தொடர்ந்து இரண்டு வாரங்களாக விஷ பாட்டில் பூர்ணிமா தான் கேப்டன் ஆக இருந்து வருகிறார். அடுத்த வாரம் மூன்று பேர் கேப்டன்ஷிப் போட்டிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் நடந்த எல்லா போட்டிகளிலும் சிறப்பாக விளையாடிய கூல் சுரேஷ் மற்றும் மாயா இருவரும் அடுத்த வார தலைவருக்கான போட்டிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதே சமயம் ஸ்மால் பாஸ் வீட்டில் இருந்து விசித்ரா தேர்வானார். கூல் சுரேஷ், விசித்ரா, மாயா இவர்கள் மூன்று பேருக்கும் தான் அடுத்த வார தலைவருக்கான போட்டி நடத்தப்பட்டது.

மேடையில் ஒரு காலை தூக்கிக் கொண்டு இன்னொரு காலில் மட்டுமே அதிக நேரம் யார் நிற்கிறார்களோ அவர்கள்தான் அடுத்த வார கேப்டன் ஆக முடியும். இந்த போட்டியில் விசித்ரா மிகக் குறைந்த நேரம் மட்டுமே ஒரு காலை தூக்கி கொண்டு நிற்க முடிந்தது. அவர் வெளியேறியதும் மாயா, கூல் சுரேஷ் இருவருக்கும் கடும் போட்டி நிகழ்ந்தது. ஆனால் கூல் சுரேஷ் ஒரு கட்டத்தில் தடுமாறி காலை ஊன்றி விட்டார்.

கடைசியாக மாயா தான் வெற்றி பெற்று அடுத்த வாரம் கேப்டன் ஆனார். சும்மாவே மாயாவின் ஆட்டம் தாங்காது, இதுல அவர் அடுத்த வார கேப்டன் ஆகிவிட்டால் பிக் பாஸ் வீடே தலைகீழாக மாறிவிடும். அதிலும் ஸ்மால் பாஸ் வீட்டிற்குள் யார் போக வேண்டும் என்பதை கேப்டன் தான் முடிவெடுப்பார்.

தனக்கு யாரெல்லாம் பிடிக்காதோ அவர்களை எல்லாம் மாயா ஸ்மால் பாஸ் வீட்டிற்குள் பொறுக்கி போட போகிறார். குறிப்பாக ரவீனா- மணி இருவரும் காதல் பறவைகளாக பிக் பாஸ் வீட்டில் ஜாலியாக இருக்கின்றனர். அவர்களை அடுத்த வாரம் வச்சு செய்யப் போகிறார். ஏனென்றால் மணியை மாயாவுக்கு சுத்தமாகவே பிடிக்காது, அந்த வெறுப்பை அவர் கேப்டன் ஆனதும் காட்டுவார்.

ஆனால் இந்த கேப்டன்ஷிப் போட்டிக்கு ஸ்மால் பாஸ் வீட்டிலிருந்து விசித்ராவிற்கு பதில் தினேஷ் தேர்ந்தெடுத்திருந்தால் அவர்தான் அடுத்த வார தலைவராகி இருப்பார். தினேஷ் மட்டும் கேப்டன் ஆகி இருந்தால் பிக் பாஸ் சீசன் 7ல் இது வரை இல்லாத ஒரு மாற்றம் ஏற்பட்டிருக்கும். கடந்த வாரம் திடீரென என்ட்ரி கொடுத்த 5 வைல்ட் கார்ட் போட்டியாளர்களுள் தினேஷ் மட்டும் தனித்துவமாக விளையாடுகிறார். அவர் பைனல்ஸ் வரை செல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது.

vichithra-bb7

விசித்ராவை வச்சு செய்த 5 போட்டியாளர்கள்.. கெட்ட வார்த்தையால் அர்ச்சனை செய்து வெளியேறிய சம்பவம்

Bigg Boss Tamil Season 7 Today Promo: இன்று வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் ஸ்மால் பாஸ் வீட்டில் இருக்கும் விசித்ராவை 5 போட்டியாளர்கள் வச்சு செய்து விட்டனர். இதனால் கோபத்தின் உச்சத்திற்கு போன அவர் வாயில் என்ன வார்த்தை வருகிறது என்று கூட தெரியாமல் சரமாரியாக கெட்ட வார்த்தைகளால் அர்ச்சனை செய்துவிட்டார்.

அது மட்டுமல்ல ஒரு கட்டத்தில் கோபம் தலைக்கேறி தன்னையே அறியாமலும் அழுதுவிட்டார். அந்த வீட்டில் எனக்கு பைத்தியமே பிடிக்குது என்றும் கதறுகிறார். இந்த வார கேப்டனான பூர்ணிமாவிடம் விசித்ரா ‘எதுக்குடி என்ன ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பிச்சீங்க’ என்று சண்டைக்கு நிற்கிறார்.

ஏனென்றால் அந்த அளவிற்கு ஸ்மால் பாக்ஸ் வீட்டில் இருக்கும் 5 வைல்ட் கார்ட் போட்டியாளர்களும் கிளாமர் குயின் விசித்ராவை வச்சு செய்கின்றனர்.  பிக் பாஸ் வீட்டில் மூத்தவராக இருக்கும் விசித்ரா அப்போது மற்ற போட்டியாளர்களுக்கு அறிவுரை சொல்வார்.

ஆனால் வைல்ட் கார்ட் என்ட்ரிகளாக உள்ளே வந்திருப்பவர்கள் யாருமே விசித்ராவை சுத்தமா மதிக்கவில்லை. அவர் சமையல் செய்யும்போது வேண்டிய உதவிகளை செய்யாமல் எனக்கென்னன்னு இருக்கிறார்கள்.  அதிலும் குறிப்பாக அர்ச்சனா விசித்ராவிடம் ஓவராக திமிரு காட்டுகிறார்.

இதனால் பொறுமையை இழந்த விசித்ரா விதிகளை மீறி ஸ்மால் பாஸ் வீட்டில் இருந்து பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். அவரை சமாதானப்படுத்தி எப்படியாவது மறுபடியும் ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் முயற்சிக்கின்றனர். விசித்ரா விதிகளை மீறி பிக் பாஸ் வீட்டிற்குள் வந்ததால் கேஸ் கட் ஆகும்.

கேஸ் இல்லாம யாராலும் சமைக்க முடியாது, எல்லாரும் சாப்பிடாமல் மூடிக்கிட்டு இருங்க’ என்று கெட்ட வார்த்தைகளால் விசித்ரா அர்ச்சனை செய்கிறார். இந்த சம்பவத்தால் வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் உறைந்து போனார்கள். இன்றைய நிகழ்ச்சி விசித்ராவால் சூடு பிடித்துள்ளது.

ethirneechal

மாரிமுத்து இல்ல டிஆர்பியும் இல்ல இழுத்தடிக்கும் எதிர்நீச்சல்.. திக்கு திசை தெரியாமல் தடுமாறும் ஜீவானந்தம்

மாரிமுத்து இல்லாததால் எதிர்நீச்சல் சீரியலில் டிஆர்பி ரேட்டிங் குறைந்துவிட்டது.