bb-house-maaya-bb7

சகுனி வேலையை சரியாக பார்த்த மாயா.. ரணகளமான பிக் பாஸ் வீடு, கொளுத்தி போட்டு வேடிக்கை பார்க்கும் சைக்கோ

Bigg Boss Season 7 Promo: பிக் பாஸ் சீசன் 7 நாளுக்கு நாள் சூடு பிடிக்கிறது. இதிலிருக்கும் ஒவ்வொரு போட்டியாளர்களும் வேணுங்கிற கன்டன்ட்டை வாரி வழங்குகின்றனர். அதிலும் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் பிக் பாஸ், ஸ்மால் பாஸ் போன்ற இரு வீட்டார்களிடமும் பகை முற்றிவிட்டது.

நேற்று நடந்த பிரச்சினையை வைத்து பிரதீப் சமைக்க முடியாது என படுக்கையிலேயே படுத்து இருக்கிறார். அவர் வந்தால் மட்டுமே சமையல் வேலையை ஆரம்பிக்க முடியும் என ஸ்மால் பாஸ் ஹவுஸ் போட்டியாளர்கள் ஸ்ட்ரைக் செய்கின்றனர். இதற்கெல்லாம் சகுனியாக மாயா தான் இருந்து மொத்த திட்டத்தையும் தீட்டுகிறார்.

இவர் தொடக்கத்திலிருந்தே ஸ்மால் பாஸ் ஹவுஸில் இருப்பவர்கள் பிக் பாஸ் போட்டியாளர்களை எப்படி எல்லாம் டார்ச்சல் செய்ய முடியுமோ அந்தந்த வகையில் எல்லாம் டார்ச்சர் செய்து வருகிறார். சாப்பாட்டில் மிளகாய் பொடியை அள்ளிப் போடுவது, சேமியாவை கேவலமாக செய்து தருவது என இவர்களுடைய அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.

இப்போது மொத்தமாகவே சமைக்க முடியாது என ஸ்மால் பாஸ் ஹவுஸ் மேட்சை சகுனி மாயா ட்ரிகர் செய்துவிட்டார். இதற்கு பிரதீப்பும் ஒத்துழைத்து பிக் பாஸ் வீட்டை ரணகளம் ஆக்குகிறார். இப்படி கொழுந்து விட்டு எரியும் பிக் பாஸ் வீட்டில் இனி ஏகப்பட்ட பிரச்சனைகள் ஆரம்பிக்கப் போகிறது. ஸ்மால் பாஸ் ஹவுஸ் மேட்ஸ் சமைத்து தர முடியாது என பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களுக்கு சோறு போடாமல் சாவடிக்க பார்க்கின்றனர்.

ஆனால் அவர்கள் கில்லாடித்தனமாக பிரட், ஸ்நாக்ஸ் போன்றவற்றை பதுக்குகின்றனர். அதே சமயம் ஸ்மால் பாஸ் வீட்டாரும் இதே வேலையை பார்க்கின்றனர். இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் சோத்து பிரச்சனை தான் தலை விரித்தாட போகிறது. இதற்கு கமல் நிச்சயம் சரியான பதிலடி கொடுப்பார்.

ethirneechal

குணசேகரன் கேரக்டருக்கு பொருத்தமே இல்லாத ஆளு.. இதுல வேற டபுள் மடங்கு சம்பளம், மொத்தமா ஆப்பு வச்ச சன் டிவி

புதிய குணசேகரன் கொஞ்சம் கூட செட்டே ஆகவில்லை, சன் டிவி நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு.

BB7-kannamma-vinusha

கண்ணம்மாவிற்கு செக் வைத்த பிக் பாஸ்.. போரிங் கண்டஸ்டண்ட் என போட்ட அரெஸ்ட் வாரண்ட் 

Bigg Boss 7 Promo: மற்ற சீசன்களை காட்டிலும் இந்த சீசனில் பிக் பாஸ், ஸ்மால் பாஸ் என இரண்டு வீடுகளாக பிரிக்கப்பட்டிருக்கின்றனர். கடந்த வாரம் 7 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர்.  இதில் ஐந்து போட்டியாளர்கள் முதலில் தேர்வாகி அதன் பின்பு விசித்ரா, யுகேந்திரன் இருவரும் விதி மீறலால் ஸ்மால் பாக்ஸ் வீட்டிற்கு சென்றார்கள்.

இந்த வாரம் ஸ்மால் பாஸ் வீட்டிற்கு யார் செல்லப் போகிறார்கள் என்பதை நேற்று கேப்டன் தேர்வு செய்து அனுப்பி வைத்தார். ஆனால்  கடந்த வாரம் முழுவதும்  மக்களை எண்டர்டெயின்மென்ட் செய்யாமல் போரிங் கண்டஸ்டண்ட் என இரண்டு போட்டியாளர்களை குறிப்பிட்டு அவர்களை அரெஸ்ட் வாரண்ட் செய்துவிட்டனர்.

அந்த இரண்டு நபர்களும் இப்போது பிக் பாஸ் வீட்டில் இருந்து ஸ்மால் பாஸ் வீட்டிற்கு செல்ல போகின்றனர். அதில்  ஒருவராக தான் கண்ணம்மாவாக சின்னத்திரை ரசிகர்களிடம் பரீட்சியமான வினுஷா தேவி சிக்கிக்கொண்டார். ஏற்கனவே கடந்த வாரம் முழுவதும் அவர் ஸ்மால் பாஸ் வீட்டில் தான் இருந்தார்.

இந்த வாரம் தான் நிம்மதி பெருமூச்சு விட்டு பிக் பாஸ் வீட்டில் ஜாலியாக இருக்கப் போகிறோம் என மனக்கோட்டை கட்டி இருந்தார். ஆனால் இப்போது பிக் பாஸ் அதை தூள் தூளாக உடைத்தெறிந்து வினுஷா தேவி மற்றும் அக்ஷரா இருவரையும் ஸ்மால் பாஸ் வீட்டிற்கு  அனுப்பிவிட்டார்.

இந்த  அறிவிப்பு அடங்கிய ப்ரோமோ தற்போது வெளியாகி நிகழ்ச்சியின் சுவாரசியத்தை  மிகைப்படுத்தியது. அதிலும் இதை சொன்னதும் அந்த 2 போட்டியாளர்களுக்கு செம ஷாக் ஆனது. ஆனால் ஸ்மால் பாஸ் வீட்டில் இருக்கும் விஷ்ணு உள்ளிட்ட பிற போட்டியாளர்கள் கைதட்டி சந்தோசமாக ஆரவாரம் செய்தனர்.

இது அக்ஷயாவிற்கு சுத்தமாகவே பிடிக்கல. அவர் தனியாக சென்று கேமரா முன்பு தேம்பி தேம்பி அழுகிறார். இதனாலேயே ஸ்மால் பாஸ் வீட்டில் நிச்சயம் கலவரம் வெடிக்கும். அமைதியாக இருந்தால் ‘ஏரி மிதிச்சு, தலையில் மிளகாய் அரைத்து விடுவார்கள்’ இனிவரும் நாட்களில் அக்ஷயா மற்றும் வினிஷா தேவி இருவரும் தங்களது நிஜ முகத்தை காட்டப் போகின்றனர்.