Vichithra

லட்டுல ஆப்பு வைத்த பிக்பாஸ்.. விச்சுவுக்கு பொங்கல் வைக்க பிளான் போடும் Bully Gang

Biggboss 7: பிக்பாஸ் 7 பரபரப்பாக போய்க்கொண்டிருக்கும் வேளையில் நேற்றைய எபிசோடில் தீபாவளி கொண்டாட்டத்தை முன்னிட்டு லட்டு இரண்டு ட்ரேகளில் அனுப்பப்பட்டது. லட்டில் ஸ்டார் மட்டுமின்றி ஆப்பையும்

maya-poornima-pradeep

பிரதீப் சோலிய முடிச்சாச்சு, அடுத்த பாயாசம் யாருக்கு.? வேட்டைக்கு தயாராகும் மாயா அண்ட் கோ

Biggboss 7: எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு பிக்பாஸ் சீசன் 7 ரணகளமாக சென்று கொண்டிருக்கிறது. அதிலும் போட்டியாளர்களின் கேம் ப்ளான் எதிர்பார்க்காத வகையில் இருக்கிறது. இதுவே

pradeep-eviction

பிரதீப் வாயை திறந்தால் மொத்தமும் காலி.. மரண பீதியில் மாயா மறைக்கும் உண்மை

Maya-Pradeep: விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி இப்போது டிஆர்பியில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது. அதிலும் கடந்த வாரம் கேப்டனாக இருந்த மாயா செய்த வில்லத்தனம் ஒவ்வொன்றும்

vijay tv-pradeep

செஞ்ச பாவத்துக்கு பரிகாரம் தேடும் விஜய் டிவி.. பிரதீப்புக்கு கிடைத்த மறு வாய்ப்பு

Pradeep-Vijay Tv: கடந்த ஒரு வாரமாகவே சோசியல் மீடியாவில் விஜய் டிவியை பிக்பாஸ் ரசிகர்கள் கிழி கிழி என்று கிழித்து விட்டனர். இதற்கு முக்கிய காரணம் பிரதீப்புக்கு

pandian-stores2

அர்த்த ராத்திரில கதவை தட்டுவாங்க.. பார்க்கக் கூடாததை எல்லாம் பார்த்த பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை

Pandian Stores: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். அதிலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரை விரும்பாத இல்லத்தரசிகளே இருக்க முடியாது. அதனாலயே இப்போது அதன்

kaml-bb7-promo-new

சூனியக் கிழவியை அலறவிட்ட ஆண்டவர்.. இன்னைக்கு சம்பவம் இருப்பது உறுதி

Bigg Boss Tamil Season 7 | 12th November 2023 – Promo 3: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி நாளுக்கு நாள் சூடு பிடிக்கிறது. அதிலும் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவை பார்த்தால் நிச்சயம் இன்றைக்கு சம்பவம் இருக்கு. ஏற்கனவே நேற்று முழுவதும் பிரதீப்பிற்கு ரெட் கார்ட் கொடுத்தது சரியா தவறா என காரசாரமாக கமல் விவாதித்தால், அதன் தொடர்ச்சியாக மரியாதை எவ்வளவு முக்கியம் என்றும், எதைக் கொடுக்கிறீர்களோ அதுதான் உங்களுக்கு திரும்பி கொடுக்கப்படும் என்பதை போட்டியாளர்களுக்கு சவுக்கடி கொடுக்கும் விதமாக கமல் உணர்த்தினார்.

அதேபோல் இன்றைய நிகழ்ச்சியில் கடந்த வார கேப்டன்ஷிப்பை பற்றி பேசினார்.  ஒரு போட்டியாளர் கூட மாயாவின் கேப்டன்ஷிப்பை பற்றி பாசிட்டிவான கருத்தை கொடுக்கல. மாயாவின் நெருங்கிய தோழியான விஷ பாட்டில் பூர்ணிமா கூட, ‘மாயாவின் கேப்டன்ஷிப்பில் தவறு இருந்தது’ என்று ஒத்துக் கொண்டார்.

உடனே மாயா, ‘என்னோட கேப்டன்ஷிப்பில் தவறு நடந்தது உண்மைதான். அதற்காக மனம் வருந்தி மன்னிப்பு கேட்கிறேன்’ என்று ஆஜரானார். இருப்பினும் அர்ச்சனா, விசித்ரா இருவரும் சேர்ந்து டிராமா போட்டு என்னை ட்ரிக்கர் செய்து விட்டேன் என்று குற்றம் சாட்டினார். அதற்கு கமல், ‘இப்போது எப்படி பொறுமையாக பேசுகிறீர்கள்.

அதேபோன்று பொறுமையாக அவர்களுக்கு எடுத்துரைத்திருக்கலாம். அப்படி மட்டும் செஞ்சிருந்தா, உங்களது நட்பு வட்டாரமும் பெருகி இருக்கும். சிறந்த கேப்டனாகவும் பிக் பாஸ் விஜய் கடந்த வாரம் முழுவதும் செயல்பட்டிருக்கலாம்’ என்று ஆண்டவர் சரமாரியாக விலாசினார். அப்படியும் தன்னுடைய தரப்பு நியாயத்தை மட்டுமே பேசிக் கொண்டிருந்த மாயாவை அவர் பாணியிலே பேசி அலறவிட்டார்.

கடந்த வாரம் முழுவதும் ஓவரா ஆடிய சூனியக் கிழவியின் ஆட்டம்  இன்றைய எபிசோடில் அடங்கிப் போய்விடும் என்பதை தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோ காட்டிவிட்டது. இன்றைய நிகழ்ச்சியை பார்ப்பதற்கும் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். அதுமட்டுமல்ல மாயாவின் கூட்டாளியான ஐசு இன்று எலிமினேட் ஆகுவதும் பிக் பாஸ் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கிறது.

BB promo

ரெட் கார்டு நிறைய இருக்கு, அரண்டு போன மாயா, பூர்ணிமா.. ஆண்டவரே இதைத்தான் எதிர்பார்த்தோம்

BB7 Tamil Promo: பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய ப்ரோமோ பார்வையாளர்களால் பெரிதளவில் எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்ப்புக்கு, குறைவில்லாத அளவுக்கு செம்மையாக விருந்து வைத்து விட்டார் கமல். பிரதீப் வெளியேறுவதற்குப் பிறகு நெட்டிசன்கள் செய்த அத்தனை கலவரங்களையும், பார்த்துவிட்டு தான் கமல் வந்திருக்கிறார் என்பது ப்ரோமோவை பார்க்கும் போதே தெரிகிறது.

முதல் ப்ரோமோவில் கமல் தீர்ப்பு மற்றும் தீர்வு என பேசியது பிரதீப் சர்ச்சைக்கான பதிலாகத்தான் தெரிந்தது. கமல் இன்று ஒரு முடிவோடு தான் இருக்கிறார் என்பது உறுதியாகிவிட்டது. குற்றம் சுமத்தியவர்கள், நல்லவர்களா என்ற ஒரு கேள்வியிலேயே ஏஜென்ட் டீமுக்கு மரண அடி விழ போகிறதன் முன்னோட்டம் தான். அடுத்தடுத்து வெளியான ப்ரோமோக்கள் பார்வையாளர்களை குளிர செய்திருக்கிறது.

மூன்றாவது ப்ரோமோவில் கமல், விசித்ராவிடம் உங்களுக்கு ஏதாவது சொல்ல இருக்கிறதா என்று கேட்கிறார். அதற்கு விசித்ரா, பிரதீப்பிற்கு போனவாரம் ரெட் கார்டு கொடுத்து அனுப்பினீர்கள், கடந்த வாரம் முழுக்க எனக்கும் அதே போன்று தான் நடந்தது. அதற்கு என்ன பதில், பெண்களுக்கு இங்க பாதுகாப்பு இல்லையா என கமலிடம் கேட்டார்.

பெண்களுக்கு பாதுகாப்பு உண்டு, நீங்க ஏகப்பட்ட ரெட் கார்டும் இருக்கிறது என பதில் சொன்னார். கமல் சொல்வதைக் கேட்டு மாயா மற்றும் பூர்ணிமா முகத்தில் ஈ ஆடவில்லை. விசித்ரா போன வாரம் முழுக்க என்னை மரியாதை இல்லாமல் பேசினார்கள், அதற்கு சாரி கூட இல்லையா என்று கமலிடம் கேட்டார். அதற்கு கமல், அவங்க சொல்ற சாரி உண்மை என்று நினைக்கிறீர்களா என்று கேட்டார்.

மேலும் பார்வையாளர்களை பார்த்து அவர்கள் சொல்லும் சாரியில் எனக்கு நம்பிக்கை இல்லை என்றும் சொன்னார். அதற்கு சாட்சியாக கமல் பிக் பாஸ் இடம் குறும்படமும் போட சொல்கிறார். கமல் ஏன் இப்படி சொன்னார் என்று எல்லோருக்குமே தெரியும். பெரிய பிரச்சனை நடந்த அன்று இரவு மாயா அண்ட் கோ பேசிய பேச்சு தான் அந்த குறும்படத்திற்கு காரணம்.

மாயா அன்று இரவு ரொம்ப நக்கலாக கமல் வந்து எது கேட்டாலும் நான் சாரி என்று சொல்லி விடுவேன் என கூலாக பேசியிருந்தார். அவருடன் சேர்ந்து பூர்ணிமாவும் ஒத்து ஊதி இருந்தார். இந்த ப்ரோமோவை பார்த்த பிறகு, கமல் குறும்படம் போடும்பொழுது ஏஜென்ட் டீமின் ரியாக்ஷன்களை பார்க்க ஆடியன்ஸ்கள் காத்திருக்கிறார்கள்.

BB7

என்ன கேப்டனா, வேல செய்ய விடமாட்றாங்க, கதறும் மாயா.. நாரதர் வேலையை பார்த்த பிக்பாஸ்

BB7 Promo Today: பிக் பாஸ் நிகழ்ச்சியில் எப்போதுமே சுவாரசியம் இல்லாத போது தான் நிகழ்ச்சி தரப்பினர் நாரதர் வேலையை தொடங்குவார்கள். ஆனால் இந்த வாரம் கண்டன்டுக்கு குறைவில்லை என்பது போல் அடுத்தடுத்து ஓயாத சண்டை வந்து கொண்டு இருக்கிறது. அப்படி இருந்தும், நீங்க என்ன உங்க இஷ்டத்துக்கு கண்டென்ட் கொடுக்கிறது, நான் வைக்கிறேன் பாரு ஆப்பு என்ன பிக் பாஸ் தன்னுடைய வேலையை பார்த்து விட்டார்.

வீட்டை சுத்தி 100 கேமரா இருந்தாலும், ரகசியம் பேசுகிறேன் என்ற பெயரில் தன்னுடைய அதிபுத்திசாலித்தனத்தை போட்டியாளர்கள் காட்டி இருந்தார்கள். ஆனால் அவர்களின் முகங்களில் அசடு வழிய வைப்பது போல, அவர்கள் பேசிய சர்ச்சையான கமெண்ட்களை திரை போட்டு காட்டி, பதில் சொல்லுங்கள் என கொளுத்தி போட்டு விட்டார் பிக் பாஸ்.

மாயா, பூர்ணிமா, ஜோவிகா, ஐஷு போன்றவர்கள் கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல் அலட்டிக் கொண்டார்கள். வினுஷா பற்றி நிக்சன் பேசியது திரையில் வந்ததும் நிக்சனின் முகத்தில் ஈ ஆடவில்லை. கொளுத்தி போட்டது பத்தாது என்று, எதற்கு தனித்தனியாக சண்டை போட்டுக் கொள்கிறீர்கள் கும்பலாக சண்டை போடுங்கள் என்று கோர்ட் ரூம் கொடுத்திருக்கிறார் பிக் பாஸ்.

போட்டியாளர்கள் தனித்தனியாக கன்பசன் ரூமுக்கு சென்று, யார் மேல் குற்றம் சாட்ட வழக்கு தொடர வேண்டுமோ அதை சொல்ல வேண்டும். எல்லோரும் சொல்லி முடித்த பிறகு கோர்ட் ரூமுக்கு சென்று விடுவார்கள். வழக்கு தொடுத்தவர்கள் அதற்கு எதிரானவர்கள் குற்றவாளி கூண்டில் இருக்க வேண்டும். அந்த வழக்கை வாதாடுவதற்கு போட்டியாளர்களில் இருந்து இருவர் வருவார்கள். அதே போல் ஒவ்வொரு வழக்கிற்கும் போட்டியாளர்களில் இருந்து ஒருவர் நீதிபதியாக தீர்ப்பு சொல்ல வேண்டும்.

இந்த டாஸ்க்கில் விசித்ரா, மாயா கேப்டன்சி ஒழுங்காக செய்யவில்லை என குற்றம் சுமத்தி இருக்கிறார். அதேபோல் மாயா, விசித்ரா தன்னை ஒழுங்காக வேலை செய்ய விடவில்லை என குற்றம் சாட்டியிருக்கிறார்கள். வழக்கம் போல ஸ்மால் பாஸ் வீட்டினர் மாயா, பூர்ணிமா மீது அடுக்கடுக்காக குற்றம் சாட்டியிருக்கிறார்கள். அதேபோல் பிக் பாஸ் வீட்டினர் அர்ச்சனாவையும், விசித்திராவையும் குற்றவாளிகளாக ஆக்கியிருக்கிறார்கள்.

இந்த வாரம் முழுக்க பிக் பாஸ் வீட்டில் அங்கங்கே நின்று சண்டை போட்டுக் கொண்டிருந்தவர்களை மொத்தமாக ஒன்று கூட்டி இருக்கிறார் பிக் பாஸ். ஏற்கனவே நேற்றைய டாஸ்க்கால் கொதித்துப் போய் இருப்பவர்கள், இன்று இதுதான் சாக்கு என மொத்தமாக புகுந்து விளையாட போகிறார்கள். இது தீபாவளி வாரம் என்பதால் தான் என்னவோ, பிக் பாஸ் வீட்டில் சரவெடி வெடித்துக் கொண்டிருக்கிறது.